| எண் | வினா | விடை |
| 501. | ”1987-ல் நான் சபரிமலைக்கு சென்றிருந்தேன். அப்போது சன்னிதானத்துக்குள் நுழைந்து ஐயப்பன் விக்கிரகத்தைத் தொட்டு வணங்கினேன்” என்று யார் கூறினார்? | நடிகை ஜெய்மாலா |
| 502. | ஜோத்பூர் எந்த மாநிலத்தில் உள்ளது? | ராஜஸ்தான் |
| 503. | லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல, காமன்வெல்த் போட்டி முறைகேட்டில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள எந்த காங்கிரஸ் எம்.பி. க்கு சிபிஐ சிறப்பு கோர்ட் அனுமதி அளித்தது? | சுரேஷ் கல்மாடி |
| 504. | டில்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் எப்போது நடந்தது? | 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் |
| 505. | புதுச்சேரியில் தற்போது நிதியமைச்சர் பொறுப்பை வகிப்பவர் யார்? | முதல்வர் ரங்கசாமி |
| 506. | ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் என்று “தியாகிகள் தினம்” அனுசரிக்கப்படுகின்றது? | ஜூலை 13 |
| 507. | 1931 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஸ்ரீநகர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த எந்த விசாரணைக் கைதியை விடுவிக்கப்பட்டதிற்கு பொது மக்கள் போராட்டம் நடத்தினர்? | அப்துல் காதிர் |
| 508. | 1931 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதியில் ஸ்ரீநகரில் பிரிட்டிஷ் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர்? | 22 |
| 509. | ஸ்ரீநகரில் 1931 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதியில் பிரிட்டிஷ் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட இடத்திற்கு சுதந்திரத்துக்குப் பின் என்னவென்று பெயர் சூட்டப்பட்டது? | தியாகிகளின் கல்லறைத் தோட்டம் |
| 510. | பபுவா ரயில் நிலையம் எந்த மாநிலத்தில் உள்ளது? | பீகார் |
| 511. | தன்பாத் நகர் எந்த மாநிலத்தில் உள்ளது? | ஜார்க்கண்ட் |
| 512. | ஜனாதிபதி தேர்தலில் நாடு முழுவதும் எத்தனை எம்.எல்.ஏ-க்கள், ராஜ்யசபா எம்.பி.க்கள் ஓட்டுப் போட உள்ளனர்? | 4120 எம்.எல்.ஏ-க்கள், 776 எம்.பி.க்கள், மொத்தம் 4896 பேர் |
| 513. | ஜனாதிபதி தேர்தலில் நாடு முழுவதும் ஓட்டுப் போட உள்ள எம்.எல்.ஏ, எம்.பி.க்களில் எத்தனை பேர் கிரிமினல்கள் என்று என்.ஜி.ஓ அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது? | 1450 பேர் (அ) 31 சதவீதத்தினர் (அ) மூன்றில் ஒரு பங்கு எம்.எல்.ஏ |
| 514. | என்.ஜி.ஓ என்றால் என்ன? | ஜனநாயக ஆராய்ச்சி சங்கம் |
| 515. | ஒலிம்பிக் தீபத்துடன் தேம்ஸ் நதியில் பயணம் மேற்கொண்ட முன்னாள் தங்கப் பதக்க வீரர் யார்? | சர் ஸ்டீவ் ரெட்கிரேவ் |
| 516. | லண்டனில் நடக்க உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான சின்னத்தை எந்த கடற்கரையில் வரைந்துள்ளனர்? | ரோசிலி |
| 517. | சிட்னியில் 2000 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் வலு தூக்கும் பெண்கள் பிரிவில் வெண்கலம் வென்ற இந்தியப் பெண்மணி யார்? | கர்ணம் மல்லேஸ்வரி |
| 518. | 2008 பீஜிங் ஒலிம்பிக்கில் பங்கேற்க விமானம் ஏற இருந்த எந்த வலு தூக்கும் வீராங்கனைக்கு, முன்னர் நடத்தப்பட்ட சோதனையில் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரிய வந்ததை அடுத்து அவரால் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாமல் போனது? | மோனிகா தேவி |
| 519. | சமீபத்தில் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் யார்? | பிரெட் லீ |
| 520. | பிரெட் லீ பிறந்த தேதி? | 08.11.1976 |
Monday, April 21, 2014
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு(July 2012) வினா விடைகள் 91
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment