Thursday, October 1, 2015

நீதி கதைகள் பாகம் 4

நம்ப ஊரு ஆளு ஒருத்தர் செத்து எலோகம் போறாரு..

எமனோட அங்க இருக்கிற சித்திர குப்தன், "இங்க இருக்கிற ருல்ஸ் பிரகாரம்..., நீ ரெண்டு கேள்விக்கு பதில் சொல்லிட்டா, உன்னை சொர்க்கத்துல ஜாலியா இருக்கிறத்துக்கு நாங்க அனுமதிப்போம்" ன்னு சொல்றாரு...

சரிங்க கேளுங்க ன்னு நம்பாளு சொல்ல...,

அதுக்கு சித்திர குப்தன்,

முதல் கேள்வி :- ஒரு வாரத்துல இருக்கிற நாட்கள்ல முக்கியமான மூன்று நாட்கள் எது ?

இரண்டாவது கேள்வி :-
ஒரு வருசத்துக்கு எத்தினை செகன்ட்ஸ் இருக்கு..? உனக்கு ரெண்டு நிமிஷம் அவகாசம்'ன்னு சொன்னார்.

நம்ப ஆளு, இதுக்கெதுக்கு ரெண்டு நிமிசம் யோசிக்க..! நான் உடனே சொல்லுறேன்னான் ....!!

சித்திரகுப்தன் ஆச்சர்யமாயிட்டார்.!! சரி சொல்லுப்பான்னார்..

முதல் கேள்வி விடை :-
ஒரு வாரத்துல இருக்கிற நாட்கள்ல முக்கியமான மூன்று நாள், "நேற்று, இன்று, நாளை"ன்னான்

இரண்டாவது கேள்வி விடை :- ஒரு வருசத்துக்கு 12 SECONDS இருக்கும் - னு சொல்றான்.

சித்திர குப்தன் உடனே ஆச்சர்யபட்டு, "நம்ப ஆளிடம், யோவ்.... எனக்கு ஒரே ஆச்சர்யமா இருக்கு, இது வரைக்கும் இங்க வந்த யாருமே யோசிக்காத ஒரு பதிலை முதல் கேள்விக்கு கொடுத்திருக்க, சரி பரவாயில்லை, அதை கூட நாங்க எங்க ஆன்சர் புக் ல சேத்துக் கொள்கிறோம்.
ஆனா இரண்டாவது கேள்விக்கு எப்பிடிய்யா 12 SECONDS மட்டும் இருக்கும் - ன்னு கேக்க....

அதுக்கு அந்த நம்மூரு ஆளு..., ஒரு வருசத்துல , ஜனவரி 2 nd , பிப்ரவரி 2 nd, மார்ச் 2 nd, ஏப்ரல் 2 nd, .........டிசம்பர் 2 nd, ன்னு மொத்தம் 12 SECOND'S
இருக்கும் ன்னு சொன்னதுமே...,

சித்திர குப்தன் மயக்கமாயிட்டாரு....!!! எமனுந்தாங்க...!!!

No comments:

Post a Comment