Monday, September 24, 2018

நாம் கடவுளுக்கு படைக்கும் உணவை அவர் அருந்துகிறாரா இல்லையா?

நாம் கடவுளுக்கு படைக்கும் உணவை அவர் அருந்துகிறாரா இல்லையா? என்ற சந்தேகம் சிலர் மனதில் எழுவதுண்டு.

அதே சந்தேகம் ஒரு சிஷ்யன் மனத்திலும் எழுந்தது.

இதற்கான விடையை உடனே தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைத்த அவன், தன் குருவிடம் சென்றான்.

“குருவே, நாம் கடவுளுக்காக படைக்கும் நைவேத்யத்தை அவர் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இறைவன் அதை சாப்பிட்டால் நைவேதியத்தின் அளவு குறையவேண்டும் அல்லவா?

பிறகு எப்படி அதை கடவுள் சாப்பிட்டார் என்று நம்புவது? என்று கேட்டான்.

குரு அவனை ஊடுருவி பார்த்துவிட்டு, மெளனமாக சிரித்தபடியே,

’நமது வேதாந்த வகுப்பிற்கு நேரமாகிவிட்டது. ஆகையால் இப்போது நீ வகுப்பறைக்கு செல் நான் சிறிது நேரத்தில் வருகிறேன்” என்றார்.

வகுப்பறையில் அன்று அனைவருக்கும் ஒரு அற்புத மந்திரத்தை பற்றி விளக்கினார்

குரு. பிறகு அணைத்து மாணவர்களும் அதை மனதில் பதியவைக்க துவங்கினர்.

சிறிது நேரம் கழித்து, தன்னிடம் படையலை பற்றி கேள்வி கேட்ட சிஷ்யனை சைகையால் அழைத்தார் குரு.

குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான் சிஷ்யன்.

“எனதருமை சிஷ்யனே, மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டாயா? ,” என்றார் குரு.

என்றும் மறவாதபடி முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே” என்றான் சிஷ்யன்.

அப்படியா சரி, எங்கே ஒருமுறை அந்த மந்திரத்தை என்னிடம் சொல் பார்க்கலாம் என்றார்.

மனதை ஒருநிலை படுத்திகொண்டு மந்திரத்தை உச்சரிக்க ஆரமித்தான் சிஷ்யன்.

அவன் கூறி முடித்தவுடன், சிஷ்யா நீ மந்திரத்தை சரியாக உள்வாங்கிக்கொண்டதுபோல் தெரியவில்லையே. உன் புத்தகத்தை காட்டு பாப்போம் என்றார் குரு.

பதட்டம் அடைந்த சிஷ்யன் உடனே தன் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்தான்.

நான் கூறியதில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னியுங்கள் குருவே. அனால் இந்த புத்தகத்தில் உள்ளபடியே தான் நான் மந்திரத்தை கூறினேன் என்றான்.

இந்த புத்தகத்தில் இருந்து தான் மந்திரத்தை உள்வாங்கினாயா என்றார் குரு. ஆம் குருவே என்றான் சிஷ்யன்.

அப்படியானால் நீ உள்வாங்கிய பிறகும் இதில் மந்திரம் இருக்கிறதே எப்படி?

நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் புத்தகத்தில் அது இருக்க கூடாதல்லவா? என்றார் குரு.

சிஷ்யன் குழப்பமாக பார்த்தான்.

நீ மனதில் உள்வாங்கிய மந்திரம் சூட்சம நிலையில் இருக்கிறது. புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம்.

இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன். அவனுக்கு நாம் ஸ்தூல வடிவில் படைக்கும் நைவேத்யத்தை அவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான்.

அதனாலேயே அதன் அளவு குறைவதில்லை.

உதாரணத்திற்கு இப்போது நீ உள்வாங்கியதால் புத்தகத்தில் இருந்த மந்திரத்தின் அளவு குறையவில்லை அல்லவா அதுபோல தான் என்றார் குரு.

இந்த அற்புத விளக்கத்தை கேட்டு சிஷ்யன் மெய் சிலிர்த்துபோனான்

Sunday, September 23, 2018

பத்ர அர்ச்சனை என்று சொல்லப்படுவது என்ன?

பத்ர அர்ச்சனை என்று சொல்லப்படுவது என்ன? கடவுளை எந்தெந்த பத்திரங்களால் அர்ச்சனை செய்யலாம்? எவையெல்லாம் கூடாது?

பகவத் கீதையில் கிருஷ்ணன் சொல்கிறான் நீ உள் அன்போடு எனக்கு ஒரு பத்ரத்தை அர்ப்பணித்தால் கூட போதுமன்று. பத்ரம் என்ற வடமொழி சொல்லுக்கு இலை என்பது பொருளாகும்.

கடவுளை இலைகளால் அர்ச்சனை செய்வதினால் இரண்டு நன்மைகள் ஏற்படுகிறது.
முதலாவது அர்ச்சனைக்கு பயன்படும் இலையை கொடுக்கும் மரமோ, செடியோ நன்கு
பராமரிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் இயற்கையின் தன்மை
பாதுகாக்கப்படுகிறது. இரண்டாவது மனிதனது எண்ணங்கள் அவனது விரல் வழியாக பல
நேரங்களில் வெளியில் கடத்தப்படுகிறது. எண்ண கடத்திகளாக இருக்கும்
விரல்களால் தாவர இலையை தீண்டும் போது மனித எண்ணங்கள் இலையில் பதிந்து
விடுகிறது. இலையுனடைய இயற்கை தன்மை தான் பெற்ற பதிவுகளை பிரபஞ்சத்தோடு
உடனடியாக கலப்பது தான். இதன் அடிப்படையிலேயே நமது முன்னோர்கள் இறை
வழிபாட்டில் இலைகளையும், மலர்களையும் முக்கிய பொருளாக்கினார்கள்.

இனி எந்த தெய்வத்திற்கு எந்த இலை உகந்தது எது சரி இல்லாதது என்பதை பார்ப்போம்.
1. திருபாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் அரங்கநாயகன் துளசி இலையால் மகிழ்வடைகிறான்.
2. ஆணும் பெண்ணும் சமம் என காட்ட உடலில் ஒரு பகுதியை பெண்ணுக்கு கொடுத்து உமையொருபாகனாக நிற்கும் பசுபதிநாதன் வில்வ இலையால் மகிழ்வடைகிறான்.
3. அண்ட பகிரெண்டமெல்லாம் திரிசூலத்தில் ஆட்டி வைக்கும் அன்னை பராசக்தி வேப்ப இலைய
4.  கலை கடவுளான வாணி தேவியை நாவில் நிறுத்தி உயிர்களை எல்லாம் சிருஷ்டித்து கொண்டிருக்கும் பிரம்மன் அத்தி இலை
5. பிரணவ வடிவாக திரும்பும் இடமெல்லாம் காட்சி தரும் கணபதி வன்னி இலையாலும், அருகம் புல்லாலும் மகிழ்வடைகிறார்கள்.

வேளமுகத்து விநாயகனுக்கு துளசி இலை பிடிக்காது. கங்கை தாங்கிய சிவபெருமானுக்கு தாழம்பூ, ஊமைத்தை எருக்க மலர் ஆகாது. ஓங்கி உலகளந்த உத்தமனான திருவிக்கிரமனுக்கு அட்சதை சரிவராது. தும்பை மலர் லஷ்மிக்கும், பவளமல்லி சரஸ்வதிக்கும் ஒவ்வாது. எல்லாம் சரி இலைகள் மனித எண்ணங்களை பிரம்பஜத்தில் கலக்கிறது என முதலில் சொன்னேன். அப்படி கலப்பதற்கு எந்த இலையாக இருந்தால் என்ன? இந்த கடவுளுக்கு இந்த இலை ஆகும். இது ஆகாது. என்பதுயெல்லாம் சுத்த அபத்தம் அல்லவா? என்று சிலர் யோசிக்கலாம். அவர்கள் ஒரு உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். சுவாமி விக்கரத்தை பிரஷ்டை செய்யும் போது மந்திர ஆவாகனம் செய்வது மரபு. மந்திரம் என்பது சப்த்த வகைகளின் அலைவரிசையாகும். அந்த அலைவரிசைகளுக்கு ஏற்ற அதிர்வுகளை கொடுத்தால் தான் விரும்பியதை அடையலாம். குறிப்பிட்ட மந்திர ஆவகனத்துக்கு ஏற்றவாறு மந்திர அலைவரிசைகளை சில இலைகளால் தான் செய்ய முடியும். அதனால் தான் நமது முன்னோர்கள் இன்ன தெய்வத்துக்கு இன்ன இலை ஆகாது என சொன்னார்கள்

விநாயக சதுர்த்தியன்று அர்ச்சனை செய்யவேண்டிய இலைகளும், அதன் பலன்களும்..

விநாயக சதுர்த்தியன்று அர்ச்சனை செய்யவேண்டிய இலைகளும், அதன் பலன்களும்.. இந்து சமயத்தின் முழுமுதற் கடவுளாக போற்றப்படுவர் கணபதி.

நாம் எந்ததொரு சுப காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும் விநாயகப் பெருமானை வழிபட்ட பின்பு தான் செய்ய தொடங்குவோம்.

அதனாலேயே இன்று வரை நாம் பிள்ளையார் சுழி போட்டு எழுதும் பழக்கத்தை கையாளுகிறோம்.

ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி திதியன்று சங்கட சதுர்த்தியாகவும், ஆவணி மாதம் வரும் சுக்லபட்ச சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியாகவும் கொண்டாடி வருகிறோம்.

விநாயக பெருமானை தினமும் போற்றி வழிபட்டு வந்தாலும், விநாயகர் சதுர்த்தி அன்று கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறோம்.

அன்றைய தினம் களி மண்ணால் செய்த பிள்ளையாரை நம் வீட்டுக்கு வாங்கிவந்து அலங்கரித்து, விரதமிருந்து, விநாயகருக்குப் பிடித்த பலகாரங்களைப் படைத்து, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து வழிபாடு செய்கிறோம்.

விநாயக சதுத்தியன்று 21 வகையான இலைகளைக் கொண்டு விநாயகருக்கு அர்ச்சனை செய்தால் நலம்பல அடையலாம் என்று சொல்லப்படுகிறது. விநாயகருக்கு உகந்த 21 இலைகளும்,

அதன் பலன்களும்.

.1. முல்லை இலை -

அறம் வளரும்

2. கரிசலாங்கண்ணி இலை -

இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.

3. வில்வம் இலை -

இன்பம். விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.

4. அருகம்புல் -

அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும். 21 அருகம் புற்களைக் கொண்டு அர்ச்சிப்பது அதி விசேடமானது

5. இலந்தை இலை -

கல்வியில் மேன்மையை அடையலாம்.

6. ஊமத்தை இலை -

பெருந்தன்மை கைவரப்பெறும்.

7. வன்னி இலை -

 பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.

8. நாயுருவி -

முகப் பொலிவும், அழகும் கூடும்.

9. கண்டங்கத்தரி -

 வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.

10. அரளி இலை -

எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும்.

11. எருக்கம் இலை -

கருவிலுள்ள சிசுவுக்கு பாதுகாப்புக் கிட்டும்.

12. மருதம் இலை -

மகப்பேறு கிட்டும்.

13. விஷ்ணுகிராந்தி இலை -

நுண்ணிவு கைவரப்பெறும்.

14. மாதுளை இலை -

பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும்.

15. தேவதாரு இலை -

எதையும் தாங்கும் மனோ தைரியம் கிட்டும்.

16. மருக்கொழுந்து இலை -

இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.

17. அரசம் இலை -

உயர்பதவியும், பதவியால் கீர்த்தியும் கிட்டும்.

18. ஜாதிமல்லி இலை -

சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப்பெறும்.

19. தாழம் இலை -

செல்வச் செழிப்புக் கிடைக்கப்பெறும்.

20. அகத்தி இலை -

கடன் தொல்லையிலிருந்து விடுதலைக் கிடைக்கும்.

21. தவனம் பூவின் இலை -:

நல்ல கணவன் மனைவி அமையப்பெறும்

இந்து சமயத்தின் முழுமுதற் கடவுளாக போற்றப்படுவர் கணபதி. நாம் எந்ததொரு சுப காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும் விநாயகப் பெருமானை வழிபட்ட பின்பு தான் செய்ய தொடங்குவோம்.

அதனாலேயே இன்று வரை நாம் பிள்ளையார் சுழி போட்டு எழுதும் பழக்கத்தை கையாளுகிறோம்.

ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி திதியன்று சங்கட சதுர்த்தியாகவும், ஆவணி மாதம் வரும் சுக்லபட்ச சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியாகவும் கொண்டாடி வருகிறோம்.

விநாயக பெருமானை தினமும் போற்றி வழிபட்டு வந்தாலும், விநாயகர் சதுர்த்தி அன்று கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறோம்.

அன்றைய தினம் களி மண்ணால் செய்த பிள்ளையாரை நம் வீட்டுக்கு வாங்கிவந்து அலங்கரித்து, விரதமிருந்து, விநாயகருக்குப் பிடித்த பலகாரங்களைப் படைத்து,

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து வழிபாடு செய்கிறோம்.

சதுர்த்தி ஸ்பெஷல் போஸ்ட்

"தேங்காய் உடைப்பது எதற்காக? யானை உருவம் எதற்காக? தோப்புக்கரணம் போடுகிறோமே எதற்காக?"

பெரியவாளின் விளக்கம்-

("தோர்பி: கர்ணம்" என்பதே தோப்புக்கரணம் என்று மாறியது. "தோர்பி" என்றால் "கைகளினால்" என்று அர்த்தம். 'கர்ணம்' என்றால் காது. "தோர்பி கர்ணம்" என்றால் கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது)

விநாயக மூர்த்தியிலுள்ள ஒவ்வொரு சின்ன சமாசாரத்தைக் கவனித்தாலும் அதில் நிறையத் தத்துவங்கள் இருக்கின்றன.

பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது எதற்காக?

விக்நேசுவரர், தம் அப்பாவான ஈசுவரனைப் பார்த்து "உன் சிரசையே எனக்குப் பலி கொடு" என்று கேட்டு விட்டாராம். எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தது எதுவோ அதைத் தியாகம் பண்ணினால்தான் மகா கணபதிக்குப் ப்ரியம் ஏற்படுகிறது. அவ்வளவு பெரிய தியாகம் பண்ணுவதற்குத் தயார் என்ற அறிகுறியாகத்தான், ஈசுவரனைப்போலவே மூன்று கண்கள் உடைய தேங்காயைச் சிருஷ்டித்து அந்தக் காயை அவருக்கு நாம் அர்ப்பணம் பண்ணும்படியாக ஈசுவரன் அநுக்கிரகித்திருக்கிறார்.

சிதறு தேங்காய் என்ற உடைக்கிற வழக்கம் தமிழ் தேசத்துக்கு மட்டுமே உரியது. இப்படிச் சிதறிய துண்டங்கள் யாருக்கு உரிமை என்றால் குழந்தைகளுக்குத்தான். இந்த உண்மை ஒரு குழந்தை மூலமாகத்தான் எனக்கே தெரிந்தது. அப்போது (1941) நான் நாகைப்பட்டினத்தில் சாதுர்மாஸ்ய விரதம் அநுஷ்டித்து வந்தேன். அங்கே கோயிலில் பிள்ளையாருக்கு நிறையச் சிதறுகாய் போடுவது வழக்கம். காயை உடைக்கவே இடம் கொடுக்காத அளவுக்குக் குழந்தைகள் ஒரே நெரிசலாகச் சேர்ந்துவிடும். திபுதிபு என்று அவை ஓடி வருவதில் என்மேல் விழுந்துவிடுப் போகின்றனவே என்று என்கூட வந்தவர்களுக்குப் பயம். அவர்கள் குழந்தைகளிடம் "இப்படிக் கூட்டம் போடாதீர்கள், விலகிப் போங்கள்" என்று கண்டித்தார்கள். அப்போது ஒரு பையன் 'டாண்' என்று, "பிள்ளையாருக்குத் தேங்காய் போட்டுவிட்டு, அப்புறம் எங்களை இங்கே வராதீர்கள் என்று சொல்ல உங்களுக்கு என்ன பாத்தியதையு இருக்கிறது? சிதறுகாய் போட்டால் அது எங்கள் பாத்தியதைதான். அதை எடுத்துக் கொள்ள நாங்கள் வரத்தான் செய்வோம்" என்றான். அவன் பேசிய ஜோர், அதிலிருந்த உறுதியைப் பார்த்தபோதுதான் எனக்கே, 'வாஸ்தவம்தான், குழந்தை ஸ்வாமியின் பிரஸாதத்தில் குழந்தைகளுக்குத்தான் முழு பாத்தியதையும்' என்று தெரிந்தது.

அகங்கார மண்டையோட்டை உடைத்தால் உள்ளே அமிருத் ரஸமாக இளநீர் இருப்பதை இந்தச் சிதறுகாய் உணர்த்துகிறது.

கணபதியைக் காட்டிலும் சரீரத்தில் பருமனான ஸ்வாமி வேறு யாரும் இல்லை. சிரசு யானையின் தலை. பெரிய வயிறு. பெரிய உடம்பு. அவருக்கு 'ஸ்தூல காயர்' என்றே ஒரு பெயர். மலைபோல் இருக்கிறார். ஆனாலும் அவர் சின்னக் குழந்தை! சரி, குழந்தைக்கு எது அழகு? குழந்தை என்றால் அந்தப் பருவத்தில் நிறையச் சாப்பிட வேண்டும். உடம்பு கொஞ்சம்கூட இளைக்கக்கூடாது. ஒரு சந்நியாசி நிறையச் சாப்பிட்டுக் கொண்டு பெரிய சரீரியாக இருந்தால் அது அவருக்கு அழகல்ல. வயசாகிவிட்டால் ராத்திரி உபவாசம் இருப்பார்கள். குழந்தை அப்படி இருப்பது அழகா? குழந்தை என்றால் தொந்தியும் தொப்பையுமாகக் கொழு கொழுவென்று இருந்தால்தான் அழகு. நிறையச் சாப்பிடுவதுதான் அழகு. குழந்தைகள் நல்ல புஷ்டியாக இருக்க வேண்டும் என்பதை இந்தக் குழந்தைச்சாமியே காட்டிக் கொண்டிருக்கிறார், கையில் மோதகத்தை வைத்துக்கொண்டு.

இவரோ யானை மாதிரி இருக்கிறார். அதற்கு நேர் விரோதமான சின்னஞ்சிறு ஆகிருதி உடையது மூஞ்சூறு. இதை அவர் தம் வாகனமாக வைத்துக் கொண்டிருக்கிறார். மற்ற ஸ்வாமிகளுக்காவது ஒரு மாடு, ஒரு குதிரை, ஒரு பட்சி, என்று வாகனம் இருக்கிறது. இவரோ தாம் எத்தனைக்கு எத்தனை பெரிய ஸ்வாமியாக இருக்கிறாரோ, அத்தனைக்கு அத்தனை சின்ன வாகனமாக வைத்துக் கொண்டிருக்கிறார். சுவாமி எதை வாகனமாக வைத்துக் கொண்டாலும் வாகனத்தினால் சுவாமிக்குக் கௌரவம் இல்லை. சுவாமியால்தான் வாகனத்துக்கும் கௌரவம். வாகனத்துக்குக் கௌரவம் கொடுக்க, அதனுடைய சக்திக்கு ஏற்றபடி நெட்டிப் பிள்ளையார் மாதிரியாகக் கனம் இல்லாமல் இருக்கிறார். அதற்குச் சிரமம் இல்லாமல், ஆனால் அதற்கு மரியாதை, கௌரவம் எல்லாம் உண்டாக்கும்படியாகத் தம் உடம்பை வைத்துக் கொண்டிருக்கிறார். ஸ்தூலகாயரான போதிலும், 'பக்தர்கள் இருதயத்தில் கனக்காமல் லேசாக இருப்பேன்' என்று காட்டுகிறார்.

ஒவ்வொரு பிராணிக்கும் ஒவ்வோர் அங்கத்தில் அதிகக் கௌரவம் இருக்கும். சவுரிமான் (கவுரிமான்) என்று உண்டு. அதன் கௌரவம் வாலில். மயில் என்றால் அதற்குத் தோகை விசேஷம். தோகையை மயில் ஜாக்கிரதையாக ரட்சிக்கும். யானை எதை ரட்சிக்கும்? தன் தந்தத்தைத் தீட்டி வெள்ளை வெளேர் என்று வைத்திருக்கும். இந்தப் பிள்ளையார் என்கிற யானை என்ன பண்ணுகிறது என்றால், அந்தக் கொம்பில் ஒன்றையே ஒடித்து, அதனால் மகாபாரதத்தை எழுதிற்று. தன் அழகு, கௌரவம், கர்வம் எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கிற ஒன்றைக் காட்டிலும், தர்மத்தைச் சொல்கிற ஒன்று தான் பெரிது என்பதை இவ்விதம் இந்த யானை காட்டியது. நியாயத்துக்காக, தர்மத்துக்காக, விந்தைக்காக எதையும் தியாகம் பண்ண வேண்டும் என்பதைத்தானே தந்தத்தைத் தியாகம் பண்ணிக் காட்டியிருக்கிறது. ஸ்வாமிக்குக் கருவி என்று தனியாக ஒன்றும் வேண்டியதில்லை. எதையும் கருவியாக அவர் நினைத்தால் உபயோகித்துக் கொள்வார் என்பதற்கும் இது உதாரணம். ஒரு சமயம் தந்தத்தாலேயே அசுரனைக் கொன்றார். அப்போது அது ஆயுதம். பாரதம் எழுதும் இப்போது அதுவே பேனா.

நமக்குப் பார்க்கப் பார்க்க அலுக்காத வஸ்துக்கள் சந்திரன், சமுத்திரம், யானை ஆகியன. இவற்றையெல்லாம் எத்தனை தடவை, எத்தனை நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும், அலுப்புச் சலிப்பில்லாத ஆனந்தம் பொங்கும். அதனால்தான் குழந்தைஸ்வாமி தன்னைப் பார்க்கிற ஜனங்களுக்கு எல்லாம், பார்க்கப் பார்க்க ஆனந்தம் எப்போதும் பொங்கிக் கொண்டிருக்கும்படியாக யானை உருவத்தோடு இருக்கிறார். அது ஆனந்த தத்துவம்; ஆராத ஆசையின் தத்துவம், அவர் பிறந்ததே ஆனந்தத்தில். பண்டாசுரன் விக்ன மந்திரங்களைப் போட்டு அம்பாளின் படை தன்னை நோக்கி வரமுடியாதபடி செய்தபோது, பரமேசுவரன் அவளை ஆனந்தமாகப் பார்த்தப்போது , அவளும் ஆனந்தமாக இந்தப் பிள்ளையைப் பெற்றாள். அவர் விக்னயந்திரங்களை உடைத்து அம்மாவுக்கு சகாயம் செய்தார்.

அவர் பார்வதி பரமேஸ்வரர்களுக்குப் பிள்ளை. இந்த உலகத்துக்கே மூலத்திலிருந்து ஆவிர்ப்பவித்ததனால், அவரை நாம் "பிள்ளையார்", "பிள்ளையார்" என்றே விசேஷித்து அழைக்கிறோம்.

எந்த ஸ்வாமியை உபாஸிப்பதானாலும் முதலில் விநாயகருடைய அநுக்கிரகத்தைப் பெற்றுக் கொண்டால்தான் அந்தக் காரியம் விக்கினம் இல்லாமல் நடைபெறும். அவரையே முழுமுதற் கடவுளாக, பிரதான மூர்த்தியாக வைத்து உபாசிக்கிற மதத்துக்கு காணபத்தியம் என்று பெயர்.

பிள்ளையாருக்கு எதிரே நின்று தோப்புக்கரணம் போடுகிறோமே, அதை நமக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தவர் மஹாவிஷ்ணுதான் என்று ஒரு கதை இருக்கிறது. ஒரு சமயம் மஹா விஷ்ணுவினுடைய சக்கரத்தை அவரது மருமகனான பிள்ளையார் விளையாட்டாகப் பிடுங்கிக் கொண்டு தம் வாயில் போட்டுக்கொண்டு விட்டாராம். பிள்ளையாரிடமிருந்து திரும்பப் பிடுங்குவது முடியாது. அவர் மிகவும் பலம் உடையவர். அதட்டி மிரட்டி வாங்கவும் முடியாது. ஆனால், அவரைச் சிரிக்க வைத்துச் சந்தோஷத்தில் அவர் வாயிலிருந்து சக்கரம் கீழே விழுந்தால் எடுத்துக்கொண்டு விடலாம் என்று மஹாவிஷ்ணுவுக்குத் தோன்றியதாம். உடனே நான்கு கைகளாலும் காதுகளைப் பிடித்துக் கொண்டு ஆடினாராம். விநாயகர் விழுந்து விழுந்து சிரித்தார். சக்கரம் கீழே விழுந்தது. விஷ்ணு எடுத்துக் கொண்டு விட்டார்.

"தோர்பி: கர்ணம்" என்பதே தோப்புக்கரணம் என்று மாறியது. "தோர்பி" என்றால் "கைகளினால்" என்று அர்த்தம். 'கர்ணம்' என்றால் காது. "தோர்பி கர்ணம்" என்றால் கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது.

விக்நேசுவரருடைய அநுக்கிரகம் இருந்தால்தான் லோகத்தில் எந்தக் காரியமும் தடையின்றி நடக்கும். தடைகளை நீக்கிப் பூரண அநுக்கிரகம் செய்கிற அழகான குழந்தைத் தெய்வம் பிள்ளையார். அவரைப் பிரார்த்தித்து, பூஜை செய்து, நாம் விக்கினங்கள் இன்றி நல்வாழ்வு வாழ்வோமாக.

பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா

பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா
என்ற படைப்பு புகழ் பெற்றது.
அதில் இடம் பெற்றுள்ள கேள்வி, பதில்களிருந்து சில... :

1. எது இதமானது ?
தர்மம்.

2. நஞ்சு எது ?
பெரியவர்களின் அறிவுரையை அவமதிப்பது.

3. மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது ?
பற்றுதல்.

4. கள்வர்கள் யார் ?
புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள்.

5. எதிரி யார் ?
சோம்பல்.

6. எல்லோரும் பயப்படுவது எதற்கு ?
இறப்புக்கு.

7. குருடனை விட குருடன் யார் ?
ஆசைகள் அதிகம் உள்ளவன்.

8. சூரன் யார் ?
கெட்ட வழியில் மனம் செல்லாமல், அதை அடக்குபவன்.

9.மதிப்புக்கு மூலம் எது ?
எதையும் யாரிடமும் கேட்காமல் இருப்பது.

10. எது துக்கம் ?
மன நிறைவு இல்லாமல் இருப்பது.

11. உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம் ?
குற்றங்கள் புரியாமல் வாழ்வதை.

12. தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை ?
இளமை, செல்வம், ஆயுள்.... ஆகியவை.

13. சந்திரனுடைய கிரணங்களைப் போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார் ?
நல்லவர்கள்.

14. எது சுகமானது ?
அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது.

15. எது இன்பம் தரும் ?
நல்ல மனதுடையோர்களின் சிநேகிதம்.

16. எது மரணத்துக்கு இணையானது ?
அசட்டுத்தனம்.

17. விலை மதிப்பற்றதென எதைக் குறிப்பிடலாம் ?
காலமறிந்து செய்யும் உதவி.

18. இறக்கும் வரை உறுத்துவது எது ?
ரகசியமாகச் செய்த பாவம்.

19. எவரை நல்வழிப்படுத்துவது கடினம் ?
துஷ்டர்கள், எப்போதும் சந்தேகத்திலேயே இருப்பவர்கள், சோகத்திலேயே சுழல்பவர்கள், நன்றி கெட்டவர்கள்... ஆகியோர் !

20. சாது என்பவர் யார் ?
ஒழுக்கமான நடத்தை உள்ளவர்.

21. உலகத்தை யாரால் வெல்ல முடியும் ?
சத்தியமும், பொறுமையும் உள்ளவரால்.

22. யாரைத் தேவர்களும் வணங்குகின்றனர் ?
எல்லாவற்றின் மீதும் கருணை உள்ளவனை.

23. செவிடன் யார் ?
நல்லதைக்
கேட்காதவன்.

24. ஊமை யார் ?
சரியான சந்தர்ப்பங்களில் தகுந்த இனிமையான
சொற்களைச் சொல்லத் தெரியாதவன்.

25. நண்பன் யார் ?
பாவ வழியில் போகாமல் தடுப்பவன்.

26. யாரை விபத்துகள் அணுகாது ?
மூத்தோர் சொல் கேட்டு நடப்பவனையும், அடக்கமுள்ளவனையும்

அன்புடன்"  பகிரவும்  "அனைவரும்  உயர

புண்யமாதம் புரட்டாசி

மாதங்களைப் பற்றிய தகவல்கள் சுவையானவை. சமஸ்கிருதத் தில், “பாத்ரபதம்’ எனப்படும் மாதம், தமிழில் புரட்டாசி எனப்படு கிறது. ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு ராசிக்குள் சூரியன் பிர வேசிக்கிறது. இதன்படி, ராசி கரத்தின் தென்மேற்கிலுள்ள கன்னி ராசிக்குள் சூரியனின் பிரவேசம் நிகழும் போது, புரட்டாசி மாதம் பிறக்கிறது.

இந்த மாதம், பிதுர்களுக்குரிய வி டுதலை மாதமாகக் கருதப்படுகிறது. மறைந்த நம் முன்னோர், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்த தும், எம தர்மன் அவர்களை பூமி க்குச் செல்லும்படி உத்தரவிடுகி றார். அவர்களும் தங்கள் உறவுக ளை நாடி, இங்கே வருகின்றனர். புரட்டாசி வளர்பிறை பிரத மையி ல் இருந்து அமாவாசை வரையான, 15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்குவர். இதையே, “மகாளய பட்சம்’ என்பர்; “பட்சம்’ என்றால், “15 நாட்கள்’ எனப் பொருள்.

இந்த நாட்களில் நாம் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும். தகு தியானவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இந்த பட்சத்தில் வரும் பரணி, “மகா பரணி’ என்றும், அஷ்டமி யை, “மத்யாஷ்டமி’ என்றும், திரயோ தசியை “கஜச் சாயை’ என்றும் சொல்வர். இந்த மூன்று நாட்க ளுமே, பிதுர் வழிபாட்டுக்கு உக ந்தவை. இம்மாதத்தில் வரும் மகாளய அமாவாசையில் செய்யப்படும் பிதுர் பூஜை (இவ்வா ண்டில் Oct 8) மற்ற அமாவாசை களைக் காட்டிலும் அதிக பலன் தரும்.

ஆவணியில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடிய நாம், புரட்டா சியிலும் விநாயகர் பூஜையைத் தொடர்வது சிறப்பான பலனை த் தரும். ஏனெனில், புரட்டாசி கன்னி மா தமாக இருக்கிறது. தென் மேற்கு திசை யை, “கன்னி மூலை’ என்பர். இதனால் தான், கோவி ல்களில் இந்த திசையில் விநாயகர் பிரதிஷ்டை செய்யப் பட்டிரு ப்பார். இவரை, “கன்னி மூலை கணபதி’ என்பர். சபரிமலை செல்லும் பக்தர்கள், பம்பையில் உள்ள கன்னி மூலை கண பதி கோவிலைத் தரிசித்த பிறகே மலை யேறுகின்றனர். ஏதாவது வேண்டுதல் வைத்து, மாதம் முழுவதும் கணபதிக்கு அருகம்புல் மாலை அணிவித்தால், எண்ணியது ஈடேறும்.

நடராஜருக்கு ஆண்டில் ஆறு நாட்கள் அபிஷேகம் செய்யப்படும். அதில், புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசியும் ஒருநாள்.
அன்று மாலை சிவாலயங்களில் உள்ள நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்படும்.

இம்மாதத்து சனிக்கிழமைகள் பெருமாள் விரத த்திற்கு உகந்த வை. இவ்வாண்டு நான்கு சனிக் கிழமைகளிலும் (செப்., 22, 29, அக்., 6, 13,) பெரு மாள் கோவில்களுக்கு தவறாமல் சென்று வர வேண்டும்.

ஜாதக ரீதியாக சனி கிரகத்தால் சிரமம் அனுபவிப்போர், பெருமாள் கோவிலில் எள், நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். இதனா ல், பெருமாளின் அருளால் சிரமங்கள் பல மடங்கு குறையும். திரு ப்பதி சீனிவாசனுக்கு புகழ்பெற்ற பிரம்மோற்சவ நிகழ்ச்சி இந்த மாத த்தில் கொண்டாடப்படுகிறது.

பராசக்திக்குரிய பூஜை மாதமும் இதுவே. நவராத்திரி பூஜை (இவ் வாண்டு Oct 10– அக்., 18) இம்மாதத்தில் நடக்கிறது. அம்பா ளை, முதல் மூன்று நாட்கள் துர்க்கையா கவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியாகவும், அதையடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதியாக வும் வழிபடு கிறோம். தைரியம், செல்வம், கல்வி ஆகிய வற்றை அம்பாளிடம் வேண் டிப் பெற இந்த பூஜை நடத்தப் படுகிறது. தமிழகத்தின் முக்கிய அம்பாள் கோவில்களில் விசே ஷ பூஜைகள் நடக்கும். இந் நேர த்தில் வீடுகளிலும், கோவில் களிலும் கொலு வைப்பது சிறப் பம்சம். சரஸ்வதி பூஜைக்கு மறுநாள் விஜயதசமி கொண்டாடுகின் றனர். இந்நாட்களில், சில அம்பாள் கோவில் களில், “பாரி வேட்டை’ எனும் வெற்றித் திருவிழா நடத்தப்படும்.
முருகனுக்கும் இம்மாதத்தில் விழா உண்டு.

திருப்பரங்குன்ற
த்தில் முருகப் பெருமான் சன்னிதி குடைவரையாக உள்ளதால், அவர் முன்புள்ள வேலுக்கே பால பிஷேகம் செய்யப்படும். இந்த வேல், புரட்டாசி பவுர் ணமியன்று மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அபிஷேகம் நட க்கும். அங்குள்ள காசி விஸ்வ நாதரை, முருகப் பெருமான் வழிபாடு செய்வதாக ஐதீகம்.

புரட்டாசி மாதம், ஆன்மிக மாதம். இம்மாதத்தில், தவறாமல் வழி பாடுகளைச் செய்து, தெய்வங்கள் மற்றும் முன்னோர்களின் நல்லருளும், நல்லாசியும் பெறுவோம்.

சனி மஹா பிரதோஷம்

பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு.

யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.

பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை அனைவரும் வணங்குகின்றனர். இந்த இடத்தில் “அனைவரும்” என்பது மனிதர்களை மட்டும் குறிக்கவில்லை. முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகியோரையும் குறிக்கும்.

அந்த நேரத்தில் சிவனும் ஷேம நலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவார் என்பது

ஐதீகம்.

எனவே, அனைத்து தரப்பினரும் வழிபாடு செய்யும் நேரத்தில், நாமும் பிரார்த்தனை செய்தால், இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான நலன்களை வழங்குவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

அதற்கடுத்தப்படியாக வாகனத்திற்கு மரியாதை தரக்கூடிய வழிபாடு பிரதோஷம் ஆகும்.

சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக் கூடியது பிரதோஷ வழிபாடு.

நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது.

எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது.

மெத்தப் படித்திருந்தாலும் நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர். சிவன் கோயில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது. அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பது போல் தோன்றும்.

எனவே, பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது........

அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும்,

தோஷங்கள் நீங்குகிறது.

எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.

காராம்பசுவின் பாலைக் கொண்டு நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பிராமணனைக் கொன்ற சாபம், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும் என விரதமாலை நூல் கூறுகிறது.

எனவே, பிரதோஷ காலத்தில் ஈசனை வழிபடுவதன் மூலம் அனைத்து தரப்பு மனிதர்களும் பலன் பெற முடியும். குறிப்பாக சாயும்காலம் (மாலை) வழிபாடு மேற்கொள்வது கூடுதல் பலனைத் தரும்.

சனி மஹா பிரதோஷம்:

**********

சனி பிரதோஷம் என்று கூறமாட்டார்கள். சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். சனிக்கிழமை பிரதோஷம் அத்தனை மகத்துவம் வாய்ந்தது. சனிக் கிழமை வரும் பிரதோஷம். எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோயிலுக்குச் சென்று சிவனாரை, தென்னாடுடைய சிவனை வழிபடுவது சிறப்பு. மகா புண்ணியம்.

ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தைப் போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு சென்று சிவதரிசனம் செய்யுங்கள். இதனால், ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும். என்கிறது சிவாகமம். கிரக தோஷத்தால் ஏற்படும் தீமை குறையும். பஞ்சமா பாவமும் நீங்கும். சிவனருள் கிடைத்து, பரிபூரணமாய் வாழலாம்.

ஆன்மீகக் கதைகள்

ஒரு சமயம் கிருஷ்ணர், பலராமர், அர்ஜுனன் மூவரும் அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்தனர். இரவாகி விட்டது. மூவரும் ஓரிடத்தில் தங்கி விடிந்ததும் செல்லலாம் என்று எண்ணினார். வனத்தில் துஷ்ட மிருகங்கள் இருக்கும் என்பதால் மூவரும் ஒருசேரத் தூங்கக்கூடாது என்றும், ஜாமத்துக்கு ஒருவராகக் காவல் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன்படி கிருஷ்ணரும், பலராமரும் தூங்கச் செல்ல அர்ஜுனன் காவல் இருந்தான். அப்போது திடீரென புகை மண்டலம் சூழ்ந்தது. அதிலிருந்து ஒரு பயங்கர உருவம் வெளிப்பட்டது. அகன்ற நாசியும், தூக்கிய பற்களும், முட்டைக் கண்களுமாக இருந்தது அவ்வுருவம். மரத்தடியில் இருவர் தூங்குவதையும், ஒருவன் காவல் இருப்பதையும் கண்ட அவ்வுருவம் தூங்கும் இருவரின் அருகில் சென்றது. அதைக்கண்ட அர்ஜுனன் கோபத்துடன் அதைத் தடுத்தான். அப்போது அந்த உருவம் அவ்விருவரையும் தான் கொல்லப்போவதாகவும் அதற்கு அர்ஜுனன் துணை செய்யவேண்டும் என்றும் கேட்டது. அதைக் கேட்ட அர்ஜுனன், கோபம் கொண்டு அவ்வுருவத்தைத் தாக்கினான்.

அர்ஜுனனின் கோபம் அதிகமாக அதிகமாக, அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெருகியது. அர்ஜுனன் ஆக்ரோஷத்தோடு அதனுடன் போரிட, அது பூதாகாரமாய் விளங்கியது. இறுதியில் அர்ஜுனனைப் பலமாகத் தாக்கிவிட்டு மறைந்தது. இரண்டாம் ஜாமம் தொடங்க, பலராமரை எழுப்பிவிட்டு அர்ஜுனன் தூங்கச் சென்றான். பலராமர் காவல் இருந்தார். அப்போது, மீண்டும் அவ்வுருவம் அங்கு தோன்றி, அர்ஜுனனிடம் கூறியது போல பலராமரிடமும் கூறியது. அதைக்கேட்டு கோபம் கொண்ட பலராமரும் அதனுடன் சண்டையிட்டார். அவ்வுருவம் அடிபணிவதாய் இல்லை. பலராமரின் கோபம் அதிகமாக அதிகமாக, அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெரிதானது. பின் பலராமரையும் பலமாகத் தாக்கிவிட்டு அவ்வுருவம் மறைந்து விட்டது. மூன்றாம் ஜாமம் தொடங்க, பலராமர் கிருஷ்ணரை காவலுக்கு எழுப்பிவிட்டு தூங்கச் சென்றார். அப்போதும் அப்பொல்லாத உருவம் தோன்றியது. அதைப் பார்த்த கிருஷ்ணர், கடகடவெனச் சிரித்தார்.

ஏன் சிரிக்கிறாய்? என்றது அவ்வுருவம். உனது தூக்கிய பற்களையும், அழகான முட்டைக்கண்களையும் கண்டுதான் என்றார் கிருஷ்ணர், சிரிப்பை அடக்க முடியாமல். அவர் தன்னைக் கேலி செய்வதைக் கண்டு ஆக்ரோஷத்துடன் அது சண்டை போட்டது. கிருஷ்ணரோ புன்னகையை மாற்றாமலே, சண்டை போட்டார். கிருஷ்ணர் சிரிக்கச் சிரிக்க அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் குறைந்துகொண்டே வந்தது. கடைசியில் அவ்வுருவம் சின்னஞ்சிறு புழுவாக மாறி தரையில் நெளிந்தது. கிருஷ்ணர் அப்புழுவை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்தார். பொழுது விடிந்தது. பலராமரும், அர்ஜுனனும் எழுந்தனர். இருவரும் இரவில் ஒரு பயங்கர உருவம் வந்ததும், அவர்களைத் தாக்கியதும் அவ்வுருவம் வளர்ந்து வளர்ந்து பெரிதாகியது பற்றியும் பேசினர். அப்போது கிருஷ்ணர், துணியில் முடிந்திருந்த புழுவைக் காட்டி, நீங்கள் இருவரும் சண்டை போட்ட உருவம் இதுதான். நீங்கள் அதனுடன் சண்டை போடும்போது கடுமையாகக் கோபப்பட்டீர்கள். உங்கள் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பலமும் வடிவமும் அதிகரித்தது. நான் சிரித்துக் கொண்டே சண்டை போட்டதால் இதன் பலமும் வடிவமும் குறைந்து கொண்டே வந்து புழுவாக மாறி விட்டது. வம்பு சண்டைக்கு வருபவனை விட்டு விட்டு புன்னகையோடு வெளியேறி விட்டால், அவன் புழுவுக்குச் சமமாகி விடுவான். கோபத்தையும் குறைப்பவனே ஞானி என்றார் கிருஷ்ணர்.