Sunday, September 23, 2018

விநாயக சதுர்த்தியன்று அர்ச்சனை செய்யவேண்டிய இலைகளும், அதன் பலன்களும்..

விநாயக சதுர்த்தியன்று அர்ச்சனை செய்யவேண்டிய இலைகளும், அதன் பலன்களும்.. இந்து சமயத்தின் முழுமுதற் கடவுளாக போற்றப்படுவர் கணபதி.

நாம் எந்ததொரு சுப காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும் விநாயகப் பெருமானை வழிபட்ட பின்பு தான் செய்ய தொடங்குவோம்.

அதனாலேயே இன்று வரை நாம் பிள்ளையார் சுழி போட்டு எழுதும் பழக்கத்தை கையாளுகிறோம்.

ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி திதியன்று சங்கட சதுர்த்தியாகவும், ஆவணி மாதம் வரும் சுக்லபட்ச சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியாகவும் கொண்டாடி வருகிறோம்.

விநாயக பெருமானை தினமும் போற்றி வழிபட்டு வந்தாலும், விநாயகர் சதுர்த்தி அன்று கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறோம்.

அன்றைய தினம் களி மண்ணால் செய்த பிள்ளையாரை நம் வீட்டுக்கு வாங்கிவந்து அலங்கரித்து, விரதமிருந்து, விநாயகருக்குப் பிடித்த பலகாரங்களைப் படைத்து, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து வழிபாடு செய்கிறோம்.

விநாயக சதுத்தியன்று 21 வகையான இலைகளைக் கொண்டு விநாயகருக்கு அர்ச்சனை செய்தால் நலம்பல அடையலாம் என்று சொல்லப்படுகிறது. விநாயகருக்கு உகந்த 21 இலைகளும்,

அதன் பலன்களும்.

.1. முல்லை இலை -

அறம் வளரும்

2. கரிசலாங்கண்ணி இலை -

இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.

3. வில்வம் இலை -

இன்பம். விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.

4. அருகம்புல் -

அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும். 21 அருகம் புற்களைக் கொண்டு அர்ச்சிப்பது அதி விசேடமானது

5. இலந்தை இலை -

கல்வியில் மேன்மையை அடையலாம்.

6. ஊமத்தை இலை -

பெருந்தன்மை கைவரப்பெறும்.

7. வன்னி இலை -

 பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.

8. நாயுருவி -

முகப் பொலிவும், அழகும் கூடும்.

9. கண்டங்கத்தரி -

 வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.

10. அரளி இலை -

எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும்.

11. எருக்கம் இலை -

கருவிலுள்ள சிசுவுக்கு பாதுகாப்புக் கிட்டும்.

12. மருதம் இலை -

மகப்பேறு கிட்டும்.

13. விஷ்ணுகிராந்தி இலை -

நுண்ணிவு கைவரப்பெறும்.

14. மாதுளை இலை -

பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும்.

15. தேவதாரு இலை -

எதையும் தாங்கும் மனோ தைரியம் கிட்டும்.

16. மருக்கொழுந்து இலை -

இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.

17. அரசம் இலை -

உயர்பதவியும், பதவியால் கீர்த்தியும் கிட்டும்.

18. ஜாதிமல்லி இலை -

சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப்பெறும்.

19. தாழம் இலை -

செல்வச் செழிப்புக் கிடைக்கப்பெறும்.

20. அகத்தி இலை -

கடன் தொல்லையிலிருந்து விடுதலைக் கிடைக்கும்.

21. தவனம் பூவின் இலை -:

நல்ல கணவன் மனைவி அமையப்பெறும்

இந்து சமயத்தின் முழுமுதற் கடவுளாக போற்றப்படுவர் கணபதி. நாம் எந்ததொரு சுப காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும் விநாயகப் பெருமானை வழிபட்ட பின்பு தான் செய்ய தொடங்குவோம்.

அதனாலேயே இன்று வரை நாம் பிள்ளையார் சுழி போட்டு எழுதும் பழக்கத்தை கையாளுகிறோம்.

ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி திதியன்று சங்கட சதுர்த்தியாகவும், ஆவணி மாதம் வரும் சுக்லபட்ச சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியாகவும் கொண்டாடி வருகிறோம்.

விநாயக பெருமானை தினமும் போற்றி வழிபட்டு வந்தாலும், விநாயகர் சதுர்த்தி அன்று கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறோம்.

அன்றைய தினம் களி மண்ணால் செய்த பிள்ளையாரை நம் வீட்டுக்கு வாங்கிவந்து அலங்கரித்து, விரதமிருந்து, விநாயகருக்குப் பிடித்த பலகாரங்களைப் படைத்து,

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து வழிபாடு செய்கிறோம்.

No comments:

Post a Comment