Wednesday, March 25, 2015

இருபது ரூபாய் நோட்டில் காணப்படும் இடம்

                                
இந்திய ரூபாய் நோட்டுகளிலேயே இரண்டு கரன்சி நோட்டுகளில் மட்டுமே இந்தியாவின் பூகோள இடங்கள் இடம் பெற்றுள்ளன. நூறு ரூபாய் நோட்டில் இமயமலையின் பனி படர்ந்த காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. இருபது ரூபாய் நோட்டில் அந்தமான் தீவின் இயற்கைக் காட்சி இடம் பெற்றுள்ளது. அந்தமானின் பாம்பு பிளாட் துறைமுகத்தில் இருந்து ஹாரியட் மலைக்கு செல்லும் வழியில் இருபது ரூபாய் நோட்டில் இடம் பெற்ற இயற்கை காட்சியைக் காணலாம். இருபது ரூபாய் வியூ பாய்ண்ட் என்ற பெயரிலேயே இந்த இடம் அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் இருக்கும் மற்ற சுற்றுலா இடங்களை போல் வர்த்தகமயமாக பிரபலப்படுத்தி லாபம் சம்பாதிக்கும் இடமாக இந்த இருபது ரூபாய் வியூ பாய்ன்ட் மாறவில்லை. ஒரு காலத்தில் ஹாரியாட் மலையில் அந்தமானின் தலைமை கமிஷனரின் கோடைகால வசிப்பிடம் இருந்தது. அந்தமானிலேயே இரண்டாவது உயரமலையான இதில் இப்போது இயற்கை பூங்கா உள்ளது. இங்கு பலவகையான பட்டாம்பூச்சிகளையும் பறவைகளையும் கண்டு ரசிக்கலாம். தென்னை, பனை மரங்கள் சூழ்ந்த மலைகள் நிறைந்த பகுதி அந்தமான் கடலை நோக்கி காணப்படுகிறது.

அதன் முனையில் 72மீட்டர் உயரமான வடக்கு கரை கலங்கரை விளக்கத்தையும், தெற்கு கரையில் நிக்கோபர் தீவின் முனையில் உள்ள இந்திரா முனை கலங்கரை விளக்கத்தையும் காண முடிகிறது. இரண்டு கலங்கரை விளக்கங்களும் 1972ல் தான் கட்டப்பட்டன. தெற்கு கரை கலங்கரை விளக்கத்தை விட வடக்குக் கரை கலங்கரை விளக்கம் இரண்டு மடங்கு பெரியது. போர்ட் பிளேர் துறைமுகத்தின் நுழைவுவாயிலின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள வடக்கு கரை கலங்கரை விளக்கத்திலிருந்து 12 வினாடிகளுக்கு ஒரு முறை இரண்டு வெள்ளை நிற ஒளி பாய்ச்சப்பட்டு கப்பல்களுக்கு வழிகாட்டுகிறது.

வார்ப்பு இரும்பால் உருவாக்கப்பட்ட இந்த கலங்கரை விளக்கங்கள் மீது வண்ணங்களால் பட்டைகள் வரையப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் ஹாரியாட் மலையில் அந்தமானின் தலைமை கமிஷனரின் கோடைகால வசிப்பிடம் இருந்தது. அந்தமானிலேயே இரண்டாவது உயரமலையான இதில் இப்போது இயற்கை பூங்கா உள்ளது. இங்கு பலவகையான பட்டாம்பூச்சிகளையும் பறவைகளையும் கண்டு ரசிக்கலாம். தென்னை, பனை மரங்கள் சூழ்ந்த மலைகள் நிறைந்த பகுதி அந்தமான் கடலை நோக்கி காணப்படுகிறது.

அதன் முனையில் 72மீட்டர் உயரமான வடக்கு கரை கலங்கரை விளக்கத்தையும், தெற்கு கரையில் நிக்கோபர் தீவின் முனையில் உள்ள இந்திரா முனை கலங்கரை விளக்கத்தையும் காண முடிகிறது. இரண்டு கலங்கரை விளக்கங்களும் 1972ல் தான் கட்டப்பட்டன. தெற்கு கரை கலங்கரை விளக்கத்தை விட வடக்குக் கரை கலங்கரை விளக்கம் இரண்டு மடங்கு பெரியது. போர்ட் பிளேர் துறைமுகத்தின் நுழைவுவாயிலின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள வடக்கு கரை கலங்கரை விளக்கத்திலிருந்து 12 வினாடிகளுக்கு ஒரு முறை இரண்டு வெள்ளை நிற ஒளி பாய்ச்சப்பட்டு கப்பல்களுக்கு வழிகாட்டுகிறது. வார்ப்பு இரும்பால் உருவாக்கப்பட்ட இந்த கலங்கரை விளக்கங்கள் மீது வண்ணங்களால் பட்டைகள் வரையப்பட்டுள்ளன.


Saturday, March 21, 2015

கிரிக்கெட் விளையாட்டில் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்கள் :

Over = வீச்சலகு
Pitch = வீசுகளம்
Out = ஆட்டமிழப்பு
Wicket = முக்குச்சி
Middle Stump = நடுக்குச்சி
Out Swinger = வெளிநாட்ட வீச்சு
Inswinger = உள்நாட்ட வீச்சு
Maiden Over = வெற்றலகு
Wicket Maiden = வீழ்வெற்றலகு
Leg Side = கால்புறம்
Off Side = எதிர்ப்புறம்
Wicket Keeper = முக்குச்சிக்காரன்
Boundary = எல்லை
One Step Forward = முன்கால்வைப்பு
Square Cut = செந்திருப்பு
Run = ஓட்டம்
Bowler = பந்தாள்
Batsman = மட்டையாள்
All Rounder = முழுவல்லார்
Fielder = களத்தர்
Bouncer = எகிறன்
Hook Shot = கொக்கியடி
Sweep Shot = துடுப்பு வலிப்படி
Pull Shot = இழுப்படி
Straight Drive = நேர்செலுத்தடி
Yorker = நேர்க்கூர் எறி
Leg Spin = வெளிவிலகுச் சுழல்
Off Spin = உள்விலகுச் சுழல்
Sixer = ஆறடி
Four = நான்கடி
Century = நூற்றீடு
Half Century = அரை நூற்றீடு
Commentry = நிகழ்சொற்றி
Commentator = நிகழ்சொற்றியர்
Appeal = முறையீடு
Run Rate = ஓட்ட ஈட்டுகை
Asking Rate = வேட்பீட்டுகை
Attacking Shot = தாக்கடி
Attacking Field = இறுக்கக் களம்
Back Foot = பின்கால்
Bail = குருத்து
Duck Out = சுழிப்பலி
Doosra = பிறழ்சுழல்
Run Out = ஓடுபலி

இன்னும் உருவாக்க வேண்டிய சொற்கள் பல. இவற்றுள் சில, தமிழ் நிகழ்சொற்றியர் மத்தியில் புழக்கத்திலும் உள்ளன. வேண்டுமெனில் இவ்வாட்டத்தில் பயன்படுத்தப்படும் அனைத்துச் சொற்களுக்கும் செந்தமிழ்ச் சொற்களை ஆக்கித் தர இயலும் !
- கவிஞர் மகுடேசுவரன்

Wednesday, March 18, 2015

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்

பொட்டு - பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம் மெஸ்மரிசம் செய்ய முடியாது.

தோடு - மூளையின் செயல் திறன் அதிகரிக்கும் கண்பார்வை திறன் கூடும் .
நெற்றிச்சுட்டி - நெற்றிச்சுட்டி அணியும்போது தலைவலி சைனஸ் பிரச்சனையை சரி செய்கிறது.

ப்ரேசிலட், வாட்ச், காப்பு & மோதிரம் - பாலுறுப்புகளை தூண்டும்.
செயின், நெக்லஸ் - கழுத்தில் செயின் அணியும்போது உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும் .

வங்கி - கையின் பூஜை பகுதியில் இறுக்கமான அணி கலன்கள் அல்லது கயிறுகள் அணியும்பொது உடலில் ரத்த ஓட்டம் சீராகி பதற்றம் படபடப்பு, பயம் குறைகிறது. மார்பக புற்று நோய் வருவது தவிர்க்க படுவதாக ஆய்விலே உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது

வளையல் - வளையல்கள் அந்த பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் வெள்ளையணு உற்பத்தி உடலில் அதிகரிக்கிறது முக்கியமான ஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட் செய்யபடுகிறது. இதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.

ஒட்டியாணம் - ஒட்டியாணம் அணியும்போது இடுப்பு பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாக தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும் வயிற்று பகுதிகள் வலுவடையும்.
மூக்குத்தி - மூக்கில் இருக்கும் சில புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. அந்த புள்ளிகள் தூண்டப்படும்போது அது சமந்தமான நோய்கள் குணமாகும்.

கொலுசு - கல்லீரல், பித்தப்பை, சிறுநீரகம், சிறுநீர்ப்பை, வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல் திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன் கொலுசு. கர்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம் .

மெட்டி - மெட்டி அணிவது கர்ப்பப்பையை பலப்படுத்தும்.

Friday, March 13, 2015

நெல்லை வன உயிரினச் சரணாலயம்

தமிழகத்தின் 15-ஆவது வனச் சரணாலயமாக நெல்லை வன உயிரினச் சரணாலயம் உருவாக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்கெனவே இருக்கும் வனச் சரணாலயங்களில் இருந்து மீதமிருக்கும் பசுமை மாறா பகுதிகளை ஒன்றிணைத்து சுமார் 35,673 ஹெக்டேர் பரப்பளவில் நெல்லை வன உயிரினச் சரணாலயம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இப்போது
14 வன உயிரினச் சரணாலயங்களும்,
5 தேசியப் பூங்காக்களும்,
14 பறவைகள் சரணாலயங்களும்,
4 புலிகள் காப்பகங்களும்,
4 யானைகள் காப்பகங்களும்,
3 உயிர்க்கோள் காப்பகங்களும்,
ஒரு பாதுகாக்கப்பட்ட ஒதுக்குப் பகுதியும் உள்ளன.

தமிழகத்தில் 22,877 சதுர கிலோ மீட்டர் தொலைவுக்கு வனப் பகுதிகள் உள்ளன. அதில் 2,948 சதுர கிலோ மீட்டர் காடுகள் அடர்ந்த காடுகளாகும்.