Tuesday, October 9, 2012

டி.என்.பி.எஸ்.சி - தமிழ்தொகுப்பு

                                      டி.என்.பி.எஸ்.சி - தமிழ் தொகுப்பு



  (பெயரெச்சம்,வினையெச்சம்)
    

பெயரெச்சம்:

       
ஒரு வினைச்சொல்லானது பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியுமாயின் அது பெயரெச்சம் ஆகும்.

          (
.காபடித்த மாணவன்,வந்த வாகனம்,தந்த பணம்,கண்ட கனவு,சென்ற நாட்கள்

               
மேற்கணடவற்றுள் படித்த,வந்த,தந்த,கண்ட,சென்ற போன்றவை பெயரெச்சங்கள் ஆகும்.
பெயரெச்சத்தை எப்படி எளிதாக கண்டுபிடிப்பது?

           
படித்த மாணவன்,வந்த வாகனம்,தந்த பணம்,கண்ட கனவு,சென்ற நாட்கள் போன்ற வாக்கியங்களைக் கொடுத்து இதன் இலக்கண வகை என்ன என்று கேட்டால்.நீங்கள் முதலில் உள்ள  படித்த,வந்த,தந்த,கண்ட,சென்ற போன்றவற்றை கணக்கிட்டுதான் பெயரெச்சம் என எண்ண வேண்டும். அதற்காகத்தான் அவை அடிக் கோடிட்டு காட்டப்பட்டிருக்கிறது.

          
ஒரு வேளை தந்த,சென்ற என்று மட்டும் கேட்கப்படலாம்

        
முதலில் படித்த,வந்த,சென்ற போன்ற வார்த்தைகளை நன்றாக உச்சரித்துப் பாருங்கள்.அவ்வார்த்தைகள '' என்னும் சத்தத்தோடு முடியும்..

விளக்கம்:

படித்த- இதன் கடைசி எழுத்து ''

'
' என்ற எழுத்தை பிரித்தால் த்+ என்று பிரியும்..

           
இப்படி வார்த்தையின் இறுதியில் '' என்னும் சத்தம் ஒலித்தால் அது பெயரெச்சம் தான் என முடிவெடுத்துக் கொள்ளவும்.

வினையெச்சம்:    முடிவு பெறாத வினைச்சொல்லே வினையெச்சம் ஆகும்.

 (
.காபடித்து முடித்தான்,வந்து சென்றான்,ஓடி  மறைந்தான்,பாடி முடித்தான்,சென்று வந்தான்.


               
மேற்கணடவற்றுள் படித்து,வந்து,ஓடி,பாடி,சென்று போன்றவை வினையெச்சங்கள் ஆகும்.
வினையெச்சத்தை எப்படி எளிதாக கண்டுபிடிப்பது?

           
படித்து முடித்தான்,வந்து சென்றான்,ஓடி  மறைந்தான்,பாடி முடித்தான்,சென்று வந்தான் போன்ற வாக்கியங்களைக் கொடுத்து இதன் இலக்கண வகை என்ன என்று கேட்டால்.நீங்கள் முதலில் உள்ள  படித்து,வந்து,ஓடி,பாடி,சென்று போன்றவற்றை கணக்கிட்டுதான் அவை வினையெச்சம் என எண்ண வேண்டும். அதற்காகத்தான் அவை அடிக் கோடிட்டு காட்டப்பட்டிருக்கிறது.

          
ஒரு வேளை தந்து,சென்று என்று மட்டும் கேட்கப்படலாம்

        
முதலில் படித்து,வந்து,சென்று போன்ற வார்த்தைகளை நன்றாக உச்சரித்துப் பாருங்கள்.அவ்வார்த்தைகள '' என்னும் சத்தத்தோடு முடியும்..

விளக்கம்:   படித்து- இதன் கடைசி எழுத்து 'து'
'
து' என்ற எழுத்தை பிரித்தால் த்+ என்று பிரியும்..

      
பாடி,ஆடி,ஓடி என்ற வார்த்தைகளை உச்சரித்துப் பாருங்கள். அவ்வார்த்தைகள் '' சத்தத்தில் முடியும்.

விளக்கம்: பாடி-இதன் கடைசி எழுத்து 'டி'

 '
டி' என்ற எழுத்தைப் பிரித்தால் ட்+ என்று பிரியும்.

           
இப்படி வார்த்தையின் இறுதியில் '' மற்றும் 'என்னும் சத்தம் ஒலித்தால் அது வினையெச்சம் தான் என முடிவெடுத்துக் கொள்ளவும்.
 வினைத்தொகை என்றால் என்ன?
     
       
மூன்று காலத்திற்கும் பொருந்தி பெயர்ச்சொல்லால் தழுவப்பெற்று வரும் தொடரே வினைத்தொகை ஆகும்.

(
.கா) ஊறுகாய்

வினைத்தொகையை எப்படி கண்டறிவது?

        
வினைத்தொகையில் இரு சொற்கள் இருக்கும்.முதல் சொல்லானது வினைச்சொல்லாக இருக்கும்.இரண்டாவது சொல்லானது பெயர்ச்சொல்லாக இருக்கும்.

      
ஊறுகாய் என்பதில் ஊறு என்பதை வினைச்சொல்லாகவும் காய் என்பதை பெயர்ச்சொல்லாகவும் எடுத்துக் கொள்க.

        
இந்த ஊறுகாய் என்ற சொல்லில் மூன்று காலங்களும் மறைந்து இருக்கின்றன.

         
ஊறிய காய்-இறந்த காலம்
          ஊறுகின்ற காய்-நிகழ்காலம்
          ஊறும் காய்-எதிர்காலம்

        
இப்பொழுது மூன்று காலங்களும் வெளிப்படுகிறது அல்லவா. இதைப்போல கொடுக்கப்பட்ட விடைகளில் எந்த சொல்லானது மூன்று காலங்களையும் உள்ளடக்கி வருகிறதோ அதுவே வினைத்தொகை என முடிவு கொள்ளுங்கள்..

(
.கா)
1)படர்கொடி

   படர்ந்த கொடி-இறந்த காலம்
   படர்கின்ற கொடி-நிகழ்காலம்
   படரும் கொடி-எதிர்காலம்

2)சுடுசோறு

   சுட்ட சோறு-இறந்த காலம்
   சுடுகின்ற சோறு-நிகழ்காலம்
   சுடும் சோறு-எதிர்காலம்

3)குடிநீர்
   
   குடித்த நீர்-இறந்த காலம்
   குடிக்கின்ற நீர்-நிகழ்காலம்
   குடிக்கும் நீர்-எதிர்காலம்
        
         கொடுக்கப்பட்டிருக்கிற அனைத்து விடைகளையும் சொல்லி சொல்லிப் பாருங்கள்..முக்காலத்தையும் உணர்த்துகிறதா என்று.ஒரு விடை மட்டும்தான் முக்காலத்தையும் உணர்த்தும்.மூன்று தவறான விடைகள் பெரெச்சமாகவோ வினையெச்சமாகவோ இருக்கலாம்.தவறான விடைகள புறந்தள்ளுவதன் மூலமும் சரியான விடையைக் கண்டு பிடிக்கலாம்.

பண்புத்தொகை என்றால் என்ன?

       
ஒரு சொல்லானது பொருளின் பண்பையும் குணத்தையும் உணர்த்தி வந்தால் அது பண்புத்தொகை ஆகும்.

 (
.கா)   செந்தாமரை

        (
முன்னதாக பெயர்ச்சொல் வகையறிதலில் பண்புப்பெயரை பற்றி படித்தோம் ஞாபகம் இருக்கிறதா? வேண்டுமானால் அந்த பாகத்தை மீண்டும் ஒருமுறைப் படித்து பண்புப்பெயரை ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள்.)

பண்புத்தொகையைக் கண்டறிவது எப்படி?

     
கொடுக்கப்பட சொற்களில் எந்த சொல்லைப் பிரிக்கும் போது 'மை' விகுதி  வருகிறதோ அது பண்புத்தொகை எனக் கண்டறிக..
     
        (
ஒரு வார்த்தையை பிரித்தெழுத தெரிய வேண்டியது அவசியம்.பிரித்தெழுக பகுதியில் உங்களுக்கு ஐந்து வினாக்கள் கேட்கப்படும்..அதை பிறகு பார்ப்போம்)

         '
செந்தாமரை' என்ற வார்த்தையைப் பிரித்தால் செம்மை+தாமரை என்று பிரியும்.
   
        '
மை' விகுதி தெரிகிறதா..ஒரு வார்த்தையை சரியாக பிரித்தால்தான் 'மை' விகுதியைக் கணடறிய முடியும்.
நிறத்தை குறிக்கும் சொற்கள்:

பசுமை,நீலம்,வெண்மை
குணத்தைக் குறிக்கும் சொற்கள்:

நன்மை,தீமை,கொடுமை,பொறாமை
சுவையைக்குறிக்கும் சொற்கள்:

காரம்,புளிப்பு,கசப்பு
வடிவத்தைக் குறிக்கும் சொற்கள்:

சதுரம்,வட்டம்,நாற்கரம்

 
வினைமுற்று என்றால் என்ன?    முடிவு பெற்ற வினைச்சொல்லே வினைமுற்று ஆகும்.

.கா. படித்தான்

           
படித்தான் என்றாலேயே ஒருவன் படித்து முடித்துவிட்டான் என்று பொருள்.

           
இப்படி ஒரு வினை முற்று பெற்றால் அது வினை முற்று.

           '
படித்தான்' என்பதில் 'படித்த' என்பது பெயரெச்சம்  (பார்க்க)
                                                      '
படித்து' என்பது வினையெச்சம் (பார்க்க)
                                                      '
படித்தான்' எனபது  வினைமுற்று..

         
பெயரெச்சமும் வினையெச்சமும் முடிவைத் தராது.'படித்தான்' என்ற வார்த்தை முடிவை பெற்றிருக்கிறது.எனவே அது வினைமுற்று.

         
கீழ்க்காண்பவனற்றுள் வினைமுற்றைக் கண்டுபிடி என வினா கேட்டால் விடையாக கொடுக்கப்பட்டிருக்கும் நான்கில் எந்த ஒரு விடை முடிவு பெற்றிருக்கிறது என்பதை அறிந்து அதற்கு விடையளியுங்கள்.

        
வினைமுற்றின் வகைகளைப் பற்றி இப்போது நாம் பார்க்கப்போவது இல்லை குரூப் 2 ன் போது அவற்றை விரிவாக பார்ப்போம்.

      
ஆனால் அடிக்கடி கேட்கப்படும் ஒரு வகை வியங்கோள் வினைமுற்று. எனவே அதை பார்ப்போம்.
வியங்கோள் வினைமுற்று:

      
,இய,இயர் என ஒரு வார்த்தை முடிந்தால் அது வியங்கோள் வினைமுற்று ஆகும்.

      
வாழ்த்துதல்,விதித்தல்,வைதல்,வேண்டிக்கொடல் ஆகிய பொருள்களில் வார்த்தைகள் வந்தால் அது வியங்கோள் வினை முற்று ஆகும்.

        
பெரும்பாலும் அவ்வார்த்தையின் இறுதி எழுத்து '' என்ற எழுத்திலேயே முடியும்.

 (
.கா)

 
வாழ்க,வீழ்க,செல்க,தருக,வருக,
 
வாழிய,வாழியர்,பார்க்க,சிரிக்க
வினையாலணையும் பெயர்:

       
ஒரு வினைமுற்று சொல் தன் வினைமுற்றுப் பொருளைக் காட்டாமல் வினை செய்தவனையோ அல்லது பொருளையோ குறிக்கும் பெயர்ச்சொல்லாக வருவதே வினையாலணையும் பெயர் ஆகும்..

(
.கா) படித்தவன்,
            
கண்டவர்
            
சென்றனன்
 எப்படி எளிதில் கண்டறிவது?:

           
கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் எந்த விடை அவர்,அவன்,அனன் போன்றவற்றில் முடிகிறதோ அதுவே வினையாலணையும் பெயர் என முடிவு. கொள்க.
        சென்ற தேர்வில் கேட்கப்பட்டிருந்த ஒரு வினா:

'
காட்சியவர்' என்பதன் இலக்கணக்குறிப்பு தருக.

) காலப்பெயர் )இடப்பெயர் )வினையாலணையும் பெயர் ) பண்புப்பெயர்

         
காட்சியவர் என்ற சொல் 'அவர்' என முடிவதால் அதுவே வினையாலணையும் பெயர் ஆகும்..

         
வினையாலணையும் பெயரைக் கண்டுபிடிக்கத் தெரியவில்லை என்றாலும் கூட பாகம் 12 ல் பெயர்சொல் க்ண்டறிவது எப்படி என்பதை தெளிவாக படித்திருந்தாலே காலப்பெயர்,இடப்பெயர்,பண்புப்பெயர் இல்லையென முடிவெடுத்து மீதி இருக்கும் ஒன்றுதான் விடை என முடிவு செய்யலாம்.
உவமைத்தொகை:

      
பொருளுக்கும் உவமைக்குமிடையே போன்ற,போல,அன்ன,நிகர போன்ற உவம உருபுகள் மறைந்து வருமாயின் அவை உவமைத்தொகை எனப்படும்..

(
.கா) கனிவாய்
             
மலரடி

       '
கனிவாய்' என்ற சொல்லிற்கு பொருள் கனி போன்ற வாய் என்பதாகும். அப்படியானல் 'போன்ற' என்ற உருபு மறைந்து வருவதைக் காணலாம்.
      
எனவே 'கனிவாய்' என்பது உவமைத்தொகை ஆகும்.
      
அதேபோல 'மலரடி' என்பதன் பொருள் மலர் போன்ற பாதம் என்பதாகும்.இதிலும் 'போன்ற' என்ற உருபு மறைந்து வருகிறது.

      
பெரும்பாலும் 'போன்ற' என்ற உருபு மறைந்து வரும்படியே வினாக்கள் அமையும்.

.கா

1.
மலர்முகம்
2.
மலர்விழி
3.
மலர்க்கை
4.
தாய்மொழி
5.
கயல்விழி
6.
அன்னைத்தமிழ்

  
மேற்கண்டவை அனைத்தும் உவமைத்தொகை ஆகும்.
உருவகம்:
    உவமைத்தொகையை நன்றாகப் புரிந்து கொண்டீர்களா..அப்படியானால் உருவகத்தை புரிந்து கொள்வது மிகச்சுலபம்.

     
அதாவது 'மலரடி' என்ற சொல் உவமைத்தொகை என்பதைப் பார்த்தோம்.
அச்சொல்லை திருப்பி எழுதினால் அது உருவகம்.

       '
மலரடி' என்ற சொல்லை 'அடிமலர்' என்று மாற்றியமைக்கும் போது உருவகம் ஆகிறது.

    
விளக்கம்:
      
ஒரு பெண்ணின் முகத்தை  பார்க்கிறீர்கள்..உடனே மலரைப் போன்ற முகம் என மலருடன் அவளது முகத்தை ஒப்பிடுகிறீர்கள்.இதுவே 'மலர்முகம்'.இது உவமைத் தொகை.

    
இன்னும் ஒருபடி மேலே போய்,மலரைப்போன்று முகமில்லை.இவள் முகத்தைப் போலத்தான் அம்மலர் இருக்கிறது என்று சொல்வீர்களானால் அது உருவகம்.அதாவது முகமலர்..(புரிதலுக்காகவே இவ்விளக்கம்)

      
அவ்வளவுதான் தோழர்களே..இரண்டுக்குமான வித்தியாசத்தை தெரிந்து கொண்டீர்களா..

எடுத்துக்காட்டு:

உவமைத்தொகை
   உருவகம
முகமலர்
மலர்க்கை
கயல்விழி
விழிகயல்

இரட்டைக்கிளவி:

   
ஒரு சொல் தொடர்ந்து இரண்டுமுறை வரும்.ஆனால் தனித்தனியே அவற்றைப் பிரித்தால் பொருளைத்தராது அதுவே இரட்டைக்கிளவி ஆகும்.

(
.கா)

சலசல,கலகல

மேற்கண்ட வார்த்தைகளை சல,கல என பிரித்தால் பொருளைத் தராது.எனவே அது இரட்டைக்கிளவி எனப்படும்.

அடுக்குத்தொடர்:

   
ஒரு சொல் தொடர்ந்து இரண்டுமுறை வரும்.ஆனால் தனித்தனியே அவற்றைப் பிரித்தால் பொருளைத்தரும். அதுவே அடுக்குத்தொடர் ஆகும்.

(
.கா)

பாம்பு பாம்பு,வருக வருக


        
மேற்கண்ட வார்த்தைகளை பாம்பு,வருக என பிரித்தால் பொருளைத் தரும்.எனவே அது அடுக்குத்தொடர் எனப்படும்.
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்:

ஈற்றெழுத்து கெட்டு வரும் பெயரெச்சம் ஈறுகெட்ட பெயரெச்சம் எனப்படும்.

(
.கா)

வாடா மலர்
தேரா மன்னன்
பொய்யா மொழி
பேசா வாய்
சிந்தா மணி

     
இதில் வாடா,தேரா,பொய்யா,பேசா.சிந்தா போன்றவை ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள் ஆகும்.

      '
' எனும் விகுதியைக் கொண்டே ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் அமையும்.எனவே எளிதாக கண்டறியலாம்.
எண்ணும்மை:

       
கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் 'உம்எனும் விகுதி வெளிப்படையாக வருமாயின் அது எண்ணும்மை எனப்படும்.

(
.கா)

        
அல்லும் பகலும்
        
காதலும் கற்பும்
        
அவனும் இவனும்

உம்மைத்தொகை:

         
கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் 'உம்' எனும் சொல் வெளிப்படையாக தெரியாமல் மறைந்து வந்தால் அது உம்மைத்தொகை எனப்படும்.

(
.கா)

         
அவன் இவன்
          
இரவு பகல்
          
இராப்பகல்

           
எனவே 'உம்' எனும் சொல் வெளிப்படையாக வந்தால் அது எண்ணும்மை ஆகும்.அதுவே மரைந்து வந்தால் அது உம்மைத்தொகை.

உரிச்சொற்றொடர்ஒன்றை பெரிது படுத்திக் காட்டுவது உரிச்சொற்றொடர் ஆகும்.

 (
.கா)     மாநகரம்
  
அதாவது பெரிய நகரம் என்று சொல்வதற்கு பதிலாக மாநகரம் என்று சொல்கிறோம்.இதுவே உரிச்சொற்றொடர் ஆகும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை மனதில் படித்துக் கொள்ளவும்..

                                              1.
சால                                              2.உறு
                                              3.
தவ                                               4.நனி
                                              5.
கூர்                                                6.கழி
                                              7.
கடி                                                 8.மா
                                              9.
தட

       
மேற்கண்டவை அனைத்தும் 'பெரிய' என்ற பொருளைத் தரக்கூடிய சொற்கள்.எனவே கேட்கப்படும் உரிச்சொற்றொடர்கள் இவற்றில் ஏதாவது ஒன்றில்தான் ஆரம்பிக்கும்..

(
.கா)
      
  
தடக்கை
  
தவப்பயன்
  
உறுபடை
 வேர்ச்சொல்லை வைத்து வினைமுற்று,வினையாலணையும்   பெயர், தொழிற்பெயர்  போன்றவை கண்டறிதல்


வேர்ச்சொல்

பெயரெச்சம்

வினையெச்சம்

வினையாலணையும்
               
பெயர்

வினைமுற்று

தொழிற்பெயர்



தா

தந்த

தந்து

தந்தவன்

தந்தான்

தருதல்


செல்
சென்ற
சென்று
சென்றவன்
சென்றான்
செல்தல்


உண்
உண்ட
உண்டு
உண்டவன்
உண்டான்
உண்ணல்


காண்
கண்ட
கண்டு
கண்டவன்
கண்டான்
காணுதல்


கூறு
கூறிய
கூறி
கூறியவன்
கூறினான்
கூறுதல்



 பொருத்துக
கொடுத்திருக்கும் சொல்லுக்கு பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து பொருத்த வேண்டும். இந்த வகையில் இரண்டு அல்லது மூன்று வினாக்கள் கேட்கப்படும்.
           
நூலின் பெயரைக் கொடுத்து அந்நூல் ஆசிரியரைத் தேடிப் பொருத்த வேண்டும்.அவ்வகையில் இரண்டு அல்லது மூன்று வினாக்கள் கேட்கப்படும். இப்பகுதியில் மொத்தம் ஐந்து வினாக்கள் கேட்கப்படும். எனவே நிறைய சொற்களையும் அவற்றிற்கான பொருளையும் நிறைய நூல்களையும் அதன் ஆசிரியர்களையும் தெரிந்திருத்தல் அவசியமாகும்.
ல்லும் பொருளும்     சொல்லும் பொருளும்

மாருதம் - காற்று                                           செரு - போர்
செறு - வயல்                                                   வேய் - மூங்கில்
தவ்வை - மூதேவி                                         மஞ்ஞை - மயில்
புரை - குற்றம்                                                  தீயுழி - நரகம்
தாளாண்மை - முயற்சி                               களிறு - ஆண் யானை
பிடி - பெண் யானை                                      அசவாமை - தளராமை
உகிர் - நகம்                                                       ஏதம் - துன்பம்
கூலம் - தானியம்                                           புரவி - குதிரை
மல்லல் - வளப்பம்                                        உம்பர் - தேவர்
குருசு - சிலுவை                                             மருள் - மயக்கம்
தொழும்பர் - தொண்டர்                               நறை - தேன்
அண்டர் - தேவர்                                             தொடை - மாலை
அஞ்சுமின் - கூற்றம்                                     களி - மகிழ்ச்சி
அறிமின் - அறநெறி                                      வட்டு - சூதாட்டக்கருவி
பொறுமின் - கடுஞ்சொல்                           மறு - குற்றம்
தகவு - நன்னடத்தை                                     பூதலம் - உலகம்
முண்டகம் - தாமரை                                    படி - நிலம்
கமுகு - பாக்கு                                                 பொருப்பு- மலை
மத்தமான் - யானை                                      கால் - காற்று
உழை - மீன்                                                      வாவி - குளம்
கிளைஞர் - உறவினர்                                  காளர் - காடு
சிவிகை - பல்லக்கு                                      தீம் - இனிமை
கொண்டல் - மேகம்                                     பிணிமுகம் - மயில்
தார் - மலை                                                     தரு - மரம்
புள் - பறவை                                                   விழுமம் - சிறப்பு
வரை - மலை                                                 மரை - மான்
விசும்பு - வானம்                                           நல்குரவு - வறுமை
சலம் - வஞ்சனை                                        கஞ்சம் - தாமரை
ஊற்றுழி - துன்புறும் காலம்                    நுதல் - நெற்றி
கேழல் - பன்றி                                               புனை - தெப்பம்
சோரன் - திருடன்                                        ஏறு - ஆண்சிங்கம்
பிணவு - பெண்                                              பல்லவம் - தளிர்
பொலம் - அழகு                                            நாவாய் - படகு ,கப்பல்
ஆகடியம் - ஏளனம்                                     பூதலம் - உலகம்
நன்னார் - பகைவர்                                     வித்து - விதை
நகை - சிரிப்பு                                                ஞாலம் - உலகம்
மாசு - குற்றம்                                               கோதை - மாலை
புனல் - நீர்                                                       தத்தை - கிளி
தொன்மை - பழமை                                    படை - அடுக்கு
ஓங்க - உயர                                                  பள்ளி - படுக்கை
பளு - சுமை                                                    விசை - வேகம்
வெற்பு - வந்தனை                                      குழவி - குழந்தை
வடு - தழும்பு                                                  சென்னி - தலை
பண் - இசை                                                    புள் - பறவை
நாண் - கயிறு                                                மேதினி - உலகம்
பார் - உலகம்                                                 மாறன் - மன்மதன்
சினம் - கோபம்                                             கஞ்சம் - தாமரை
புரவி - குதிரை                                              ஒழுக்கு - ஒழுக்கம்
களி - யானை                                               அன்ன - போல
மறவன் - வீரன்                                            ககம் - பறவை
யாக்கை - உடல்                                          பீழை - பழி
நலிவு - கேடு                                                தகவு - நன்னடத்தை
மாடு - செல்வம்                                          காணம் - பொன்
அனல் - தீ, நெருப்பு                                    சுடலை - சுடுகாடு
தாரம் - மனைவி                                         சாந்தம் - சந்தனமுகம்
விழைதல் - விருப்பம்                               தறு - வில்
குரவர் - ஆசிரியர்                                       கூவல் - கிணறு
சுரும்பு - வண்டு                                          சீலம் - ஒழுக்கம்
இடுக்கண் - துன்பம்                                   செய் - வயல்
துன்று - செறிவு                                           மடு - ஆழமான நீர்நிலை
கமடம் - ஆமை                                            வேணிசடை

     புகழ்பெற்ற நூல்கள், நூலாசிரியர்கள்:
பாரதியார் - குயில்பாட்டு, கண்ணன் பாட்டு, பாப்பாபாட்டு, பாஞ்சாலிசபதம், ஞானரதம், அக்னி குஞ்சு,பூலோக ரம்பை, சந்திரிகையின் கதை, புதியஆத்திச்சூடி, சீட்டுக் கவி
-------------------------------------------------------------------------------------------------------------
பாரதிதாசன் - குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு.
அழகின் சிரிப்பு, குறிஞ்சித் திரட்டு, இளைஞர் இலக்கியம், எதிர்பாராத முத்தம், நல்ல தீர்ப்பு,பிசிராந்தையார்.
------------------------------------------------------------------------------------------------------------
அறிஞர் அண்ணா - ஓர் இரவு, நீதித் தேவன் மயக்கம், வேலைக்காரி,
ரங்கோன் ராதா, தம்பிக்கு, கண்ணீர் துளிகள், பிடிசாம்பல், கலிங்கராணி, பார்வதி பி.., தசாவதாரம்,நல்ல தம்பி.
-----------------------------------------------------------------------------------------------------------
கலைஞர் மு.கருணாநிதி - குறளோவியம், சங்கத்தமிழ், நெஞ்சுக்கு நீதி, பொன்னர்சங்கர், ரோமாபுரி பாண்டியன், தூக்குமேடை
-----------------------------------------------------------------------------------------------------------
கண்ணதாசன் -ஆட்டனத்தி ஆதிமந்தி, இயேசு காவியம், சேரமான்
காதலி, மாங்கனி, சிவகங்கை சீமை
----------------------------------------------------------------------------------------------------------
புலவர் குழந்தை - ராவணகாவியம், காமஞ்சரி,கொங்குநாடு, நெருஞ்சிப் பழம்
----------------------------------------------------------------------------------------------------------
சுரதா - தாயின் முத்தம், துறைமுகம், தேன்மழை
-------------------------------------------------------------------------------------------------------------
வாணிதாசன் - கொடி முல்லை, எழிலோவியம், தமிழச்சி,தொடுவானம்.
------------------------------------------------------------------------------------------------------------
நாமக்கல் கவிஞர் - மலைக்கள்ளன், சங்கொலி, கவிதாஞ்சலி, என் கதை,அவனும் அவளும், தமிழன் இதயம்.
------------------------------------------------------------------------------------------------------------
அருணகிரிநாதர் - திருப்புகழ்
-------------------------------------------------------------------------------------------------------------
புகழேந்தி - நளவெண்பா
-------------------------------------------------------------------------------------------------------------
சேக்கிழார் - பெரியபுராணம்
---------------------------------------------------------------------------------------------------------------
கச்சியப்பர் - கந்தபுராணம்
-------------------------------------------------------------------------------------------------------------
குமரகுருபரர் -முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், மீனாட்சியம்மை
பிள்ளைத்தமிழ், மீனாட்சியம்மை குறம், நீதிநெறிவிளக்கம், மதுரைக்கலம்பகம்
------------------------------------------------------------------------------------------------------------
உமறுபுலவர் - சீறாப்புராணம், சீதக்காத்தி நொண்டி நாடகம்
ஒட்டக்கூத்தர் - தக்கையாப் பரணி, மூவருலா, ராஜராஜன் உலா,
குலோத்துங்கச் சோழன் பிள்ளைத்தமிழ்.
--------------------------------------------------------------------------------------------------------------
ஔவையார் -மூதுரை, ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், நல்வழி.
இராமலிங்க அடிகளார் - திருவருட்பா, ஜீவகாருண்ய ஒழுக்கம்.
--------------------------------------------------------------------------------------------------------------
ஜெயங்கொண்டார் - கலிங்கத்துப்பரணி.
--------------------------------------------------------------------------------------------------------------
கம்பர் - சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி.சிலை எழுபது, ஏர் எழுபது.
-------------------------------------------------------------------------------------------------------------
திரிகூட ராசப்பர் - குற்றாலக் குறவஞ்சி, தலபுராணம், அந்தாதி.
--------------------------------------------------------------------------------------------------------------
வில்லிபுத்தூராழ்வார் -வில்லிபாரதம், சொக்கநாதர் உலா.
--------------------------------------------------------------------------------------------------------------
அதிவீர ராமபாண்டியன் - நைடதம், வெற்றிவேட்கை.
-----------------------------------------------------------------------------------------------------------
வீரமா முனிவர் - தேம்பாவனி, சதுரகராதி, தொன்னூல் விளக்கம்
திருக்காவலூர்க் கலம்பகம், கலிவெண்பா.
------------------------------------------------------------------------------------------------------------
மீனாட்சி சுந்தரம்பிள்ளை- மனோன்மணீயம், சேக்கிழார் பிள்ளைத்தமிழ்.
-----------------------------------------------------------------------------------------------------------
எச்..கிருட்டிணப்பிள்ளை - இரட்சண்ய யாத்ரீகம்
----------------------------------------------------------------------------------------------------------
திரு.வி.. -முருகர் அல்லது அழகு, பெண்ணின்பெருமை,பொதுமை வேட்டல், இளமை விருந்து.
------------------------------------------------------------------------------------------------------------
தேசிய வினாயகம் பிள்ளை - ஆசிய ஜோதி, உமர்கயாம் பாடல்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------
கல்கி - பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம்,பார்த்திபன் கனவு, கள்வனின் காதலி, அலையோசை
-------------------------------------------------------------------------------------------------------------
சாண்டில்யன் - மலைவாசல், கடல்புறா, யவனராணி, கன்னி மாடம்
------------------------------------------------------------------------------------------------------------
புத்தமித்திரர் - வீரசோழியம்
------------------------------------------------------------------------------------------------------------
ஐயனாரிதனார் - புறப்பொருள்
------------------------------------------------------------------------------------------------------------
அமிர்தசாகரர் - யாப்பெருங்கலம்
------------------------------------------------------------------------------------------------------------
ஆண்டாள் - திருப்பாவை, நாச்சியார் திருமொழி
-------------------------------------------------------------------------------------------------------------
மாணிக்கவாசகர் திருவாசகம்,திருக்கோவையார்,திருச்சிற்றம்பலக்கோவை
-------------------------------------------------------------------------------------------------------------
முடியரசன் - பூங்கொடி, காவிரிப் பாவை, வீரகாவியம்
------------------------------------------------------------------------------------------------------------
ராஜம் ஐயர் - கமலாம்பாள் சரித்திரம்
------------------------------------------------------------------------------------------------------------
மு.வரதராசனார் - கள்ளோ காவியமோ, அகல் விளக்கு, கரித்துண்டு, பெற்ற மனம், மண் குடிசை
----------------------------------------------------------------------------------------------------------
அண்ணாமலை செட்டியார் - காவடிச்சிந்து
வேதநாயகம் பிள்ளை - பிரதாப முதலியார் சரித்திரம், பகுதிநூல் திரட்டு

பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
நான்கு சொற்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் மூன்று சொற்கள் ஒரே
பொருளையோ ஒரே காலத்தையோ சார்ந்திருக்கும். ஒரு சொல் மட்டும் பொருந்தாமல் தனித்து நிற்கும். அச்சொல் எதுவென கண்டறிய வேண்டும்.
இப்பகுதியில் ஐந்து வினாக்கள் கேட்கப்படும்.

(
.கா) மெய், வாய், கண், கன்னம்

        
மெய், வாய், கண் போன்றவை ஐம்புலன்களுள் அடங்குபவை. ஆகவே கன்னம் என்ற சொல் இதில் பொருந்தாச் சொல் ஆகும்.
         
மேலும் கீழே குறிப்பிட்டுள்ளவற்றை தெரிந்து கொண்டால் இன்னும்
எளிமையாக இருக்கும்.
--------------------------------------------------------------------------------------------------------------
மூவண்ணம் - காவி, வெண்மை, பச்சை
--------------------------------------------------------------------------------------------------------------
மூவேந்தர்கள் - சேரன், சோழன், பாண்டியன்
-------------------------------------------------------------------------------------------------------------
முக்கனி - மா, பலா, வாழை
-------------------------------------------------------------------------------------------------------------
முத்தமிழ் - இயல், இசை, நாடகம்
-------------------------------------------------------------------------------------------------------------
முப்பால் - அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்
------------------------------------------------------------------------------------------------------------
முக்காலம் - இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம்
------------------------------------------------------------------------------------------------------------
முந்நீர் - ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர்
-------------------------------------------------------------------------------------------------------------
மூன்று முரசு - கொடை முரசு, படை முரசு, மங்கள முரசு
------------------------------------------------------------------------------------------------------------
முச்சங்கம் - முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம்
------------------------------------------------------------------------------------------------------------
மூவிடம் - தன்மை, முன்னிலை, படர்க்கை
-------------------------------------------------------------------------------------------------------------
நாற்திசை - கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு
--------------------------------------------------------------------------------------------------------------
நாற்பால் - அரசன், அந்தணன், வணிகன், வேளாளன்
------------------------------------------------------------------------------------------------------------
நால்வகை உணவு - உண்ணல், தின்னல், பருகல், நக்கல்
-------------------------------------------------------------------------------------------------------------
நால்வகை சொல் - பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்
----------------------------------------------------------------------------------------------------------------
நான்மறை - ரிக், யஜூர்,சாமம், அதர்வணம்
--------------------------------------------------------------------------------------------------------------
நான்கு குணம் - அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு.
---------------------------------------------------------------------------------------------------------------
நாற்படை - தேர், யானை, குதிரை, காலாட்படை.
---------------------------------------------------------------------------------------------------------------
பாவகை - வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா
---------------------------------------------------------------------------------------------------------------
ஐம்பெருங்காப்பியங்கள்- சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி,வளையாபதி, குண்டலகேசி.
---------------------------------------------------------------------------------------------------------------
ஐஞ்சிறுங்காப்பியங்கள்- சூளாமணி, நீலகேசி, யசோதர காவியம்,
நாககுமார காவியம், உதயணகுமார காவியம்.
--------------------------------------------------------------------------------------------------------------
ஐந்திலக்கணம் - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
--------------------------------------------------------------------------------------------------------------
ஐந்தொகை - முதல், மரபு, செலவு, இருப்பு, ஆதாயம்
-----------------------------------------------------------------------------------------------------------------
ஐம்பால் - ஆண்பால், பெண்பால், பலர் பால், ஒன்றன் பால், பலவின் பால்
-------------------------------------------------------------------------------------------------------------
ஐம்பெரும்பொருள் - நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்
-------------------------------------------------------------------------------------------------------------
ஐம்பொறி - மெய், வாய், கண், மூக்கு, செவி
-------------------------------------------------------------------------------------------------------------
ஐம்புலன் - ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை
---------------------------------------------------------------------------------------------------------------
ஐந்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
--------------------------------------------------------------------------------------------------------------
ஐம்பெருங்குழு - சாரணர், சேனாதியார், தூதர், புரோகிதர், அமைச்சர்
----------------------------------------------------------------------------------------------------------------
அறுசுவை - இனிப்பு, கசப்பு, புளிப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு
---------------------------------------------------------------------------------------------------------------
பெரும்பொழுது - கார்காலம், குளிர்காலம், முன்பனி, பின்பணி,
இளவேனிற்காலம், முதுவேனிற்காலம்
---------------------------------------------------------------------------------------------------------------
சிறுபொழுது - காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம், வைகறை
---------------------------------------------------------------------------------------------------------------
ஏழிசை - குரல், துத்தம், கைக்கிளை, உழை, கிளி, விளரி, தாரம்
---------------------------------------------------------------------------------------------------------------
பெண்களின் ஏழு பருவங்கள்- பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை,
தெரிவை, பேரிளம்பெண்
---------------------------------------------------------------------------------------------------------------
எட்டுத்தொகை - நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து,பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு
--------------------------------------------------------------------------------------------------------------
நவரத்தினங்கள் - மரகதம், மாணிக்கம், முத்து, வைரம், வைடூரியம்,
கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம்
---------------------------------------------------------------------------------------------------------------
நவதானியங்கள் - நெல், துவரை, பச்சைப்பயறு, உளுந்து, எள், அவரை,
கடலை, கொள்ளு, கோதுமை
-------------------------------------------------------------------------------------------------------------
ண்பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள் 10
-
காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை,
அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்.
-------------------------------------------------------------------------------------------------------------
பெண்பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள் 10
-
காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை,
அம்புலி, அம்மாணை, கழங்கு, ஊசல்
--------------------------------------------------------------------------------------------------------------
பத்துப்பாட்டு - திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை,
சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை,
கூத்தராற்றுப்படை, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை,
குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை.
--------------------------------------------------------------------------------------------------------------
பதிணென் கீழ்க்கணக்கு நூல்கள்-
நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது,
இனியவை நாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை,
பழமொழி, சிறுபஞ்சமூலம், ஏலாதி, திருக்குறள்,
முதுமொழிக்காஞ்சி, ஐந்தினை ஐம்பது, ஐந்திணை
எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை
நூற்றைம்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, கைந்நிலை.
--------------------------------------------------------------------------------------------------------------
புறத்திணை - வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை,
தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை,பெருந்திணை

Download செய்ய கீழே உள்ள link-ஐ Click செய்யவும்

6 comments:

  1. Thank you very......... much.

    I am M.C.A graduate student. Now-a-days i was not apply any govt exams. Now i am apply group 4 exam please give me tips. My mail ID-srm.reva@gmail.com

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு பதிவு தமிழ் புத்தகங்கள் தரவிறக்க பகுதி

      Delete
  2. அருமையான பதிப்பு மிகவும் நன்றி தோழரே...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழரே தொடர்ந்து வாருங்கள் நண்பர்களுக்கு சொல்லுங்கள்

      Delete