Tuesday, October 9, 2012

டி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல்



             அகரவரிசைப் படி சீரமைத்தல்


நான்கு சொற்கள் மாறி மாறி கொடுக்கப்பட்டிருக்கும்.அவற்றை அகராதிப்படி வரிசைப் படுத்தி அமைப்பதே அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல் ஆகும்.
   

நிலை -1


முதலில் ,,,  என உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்த வேண்டும்.

நிலை-2


முதல் எழுத்திற்கு அடுத்த எழுத்து மெய்யெழுத்தாக இருந்தால் அதனை வரிசைப் படுத்தவேண்டும்..

நிலை-3

உயிர் மெய் எழுத்துக்களை ,கா,கி,கீ என்றே வரிசைப் படுத்த வேண்டும்..
குறிப்பு:

 
எக்காரணத்தைக் கொண்டும் ,, என்ற முறையில் வரிசைப் படுத்தக் கூடாது..
மாதிரி வினாக்கள்:

நிலை-1

எளிமை,ஊக்கம்,இனிமை,ஆயிரம்

விடை:
ஆயிரம்,இனிமை,ஊக்கம்,எளிமை
நிலை-2

தத்தை,தண்ணீர்,தந்தம்,தங்கை

விடை:

தங்கை,தண்ணீர்,தத்தை,தந்தம்
நிலை-3

கோமாளி,காலை,கலை,கொக்கு
விடை:

கலை,காலை,கொக்கு,கோமாளி

   
இதில் சில கேள்விகள் எளிதாகவும் சில கேள்விகள் சற்று கடினமானதாகவும் இருக்கும்இதற்கு எளிதாக சரியான விடைகளை எழுத வேண்டும் என்று நினைக்கும் தோழர்கள்,இது போல நிறைய வினாக்களுக்கு விடை எழுதி பழகிக் கொள்ளுங்கள்..

குறிப்பு:

      
அகர வரிசை பிழையின்று சீர்படுத்த '' முதல் 'ன்' வரையிலான தமிழ் அரிச்சுவடியை மீண்டும் ஒருமுறை நன்றாக வாசித்துக் கொள்ளுங்கள்..

 Download செய்ய கீழே உள்ள link-ஐ Click செய்யவும்

 

No comments:

Post a Comment