Friday, January 15, 2016

பிரபஞ்ச ரகசியம் : எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது ?

கீழே , சில காரண காரியங்களுக்கு எந்த தெய்வங்களை வணங்கினால் , உங்கள் குறை தீரும் என்று , நம் முன்னோர்கள் - சித்தர் பெருமக்கள் கூறியவற்றை கொடுத்துள்ளேன்.. உரிய டிபார்ட்மென்ட் மேனஜர் , சூப்பர்வைசர் தானே உடனடியாக தீர்வு கொடுக்க இயலும். முயன்று பாருங்கள்... மனிதம் வளர்ப்போம் !
காரியம் நடக்க
விக்னங்கள், இடையூறுகள் நீங்க - விநாயகர்
செல்வம் சேர-ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர்
நோய் தீர- ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி
வீடும், நிலமும் பெற- ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான்
ஆயுள், ஆரோக்கியம் பெற- ருத்திரன்
மனவலிமை, உடல் வலிமை பெற- ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர்
கல்வியில் சிறந்து விளங்க- ஸ்ரீ சரஸ்வதி
திருமணம் நடைபெற- ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை
நன்மையை விதைப்போம் நல்லதைச் செய்வோம்
மாங்கல்யம் நிலைக்க- மங்கள கௌரி
புத்திர பாக்கியம் பெற- சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி
தொழில் சிறந்து லாபம் பெற- திருப்பதி வெங்கிடாசலபதி
புதிய தொழில் துவங்க- ஸ்ரீகஜலட்சுமி
விவசாயம் தழைக்க- ஸ்ரீ தான்யலட்சுமி
உணவுக் கஷ்டம் நீங்க- ஸ்ரீ அன்னபூரணி
வழக்குகளில் வெற்றி பெற- விநாயகர்
சனி தோஷம் நீங்க- ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர்
பகைவர் தொல்லை நீங்க- திருச்செந்தூர் முருகன்
பில்லி, சூன்யம், செய்வினை அகல- ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர்அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற- சிவஸ்துதி
நோய் தீர
முடி நரைத்தல், உதிர்தல்- மகாலட்சுமி, வள்ளி
கண் பார்வைக் கோளாறுகள்- சிவபிரான், சுப்ரமண்யர், விநாயகர்
காது, மூக்கு, தொண்டை நோய்கள்- முருகன்
ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக் கோளாறுகள்- மகாவிஷ்ணு
மாரடைப்பு, இருதய கோளாறுகள்- சக்தி, கருமாரி, துர்க்கை
அஜீரணம், குடல்வால், அல்சர், மூலம், மலச்சிக்கல், மஞ்சள் காமாலை,
காலரா- தட்சிணாமூர்த்தி, முருகன்
நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு- முருகன்
பால்வினை நோய்கள், பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுகள்- ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ரங்கநாதர், வள்ளி
மூட்டுவலி, கால் வியாதிகள்- சக்கரத்தாழ்வார்
வாதங்கள்- சனிபகவான், சிவபெருமான்
பித்தம்- முருகன்
வாயுக் கோளாறுகள்- ஆஞ்சநேயர்
எலும்பு வியாதிகள்- சிவபெருமான், முருகன்
ரத்தசோகை, ரத்த அழுத்தம்- முருகன், செவ்வாய் பகவான்
குஷ்டம், சொறி சிரங்கு- சங்கர நாராயணன்
அம்மை நோய்கள்- மாரியம்மன்
தலைவலி, ஜீரம்- பிள்ளையார்
புற்று நோய்- சிவபெருமான்
ஞாபகசக்தி குறைவு- விஷ்ணு
தோல்விகளை கண்டு துவளாத மனமும், வெற்றிகளைக் கண்டு மமதை கொள்ளாத மனப் பக்குவமும், கஷ்டங்களை தாங்கி கொள்ளும் மனப் பக்குவமும், வெற்றிப் பாதையை நமக்கு அடையாளம் காட்டும் அந்த பரம்பொருளின் ஆசியும் நம் அனைவருக்கும் கிடைக்கட்டும் !
உங்கள் வாழ்வை நூறு சதவீதம் மாற்ற உத்திரவாதம் தரும் ஒரே ஜோதிட நிலையம்
ஸ்ரீ கால பைரவி ஜோதிட நிலையம்
விஞ்ஞான மருத்துவ ஜோதிடம் மற்றும் வானியல் மருத்துவம்
அரசு மருத்துவமனை எதிரில்
ஆத்தூர்
சேலம் (மாவட்டம்)
M.கிருஷ்ண மோகன் 8526223399

Wednesday, January 13, 2016

புகைப்படக் கருவி எவ்வாறு தொழிற்படுகின்றது?

புகைப்படக் கருவியை வைத்திருக்கும் நாம் எல்லோரும் அது எவ்வாறு தொழிற்படுகின்றது என அறிந்திருத்தல் மிகவும் பயனுள்ள விடயமாகும். கமெரா ஒன்றின் அடிப்படைப் பகுதிகள் கீழே காட்டியவாறு அமைந்திருக்கும்.
நாம் கமெராவை ஒரு பொருளின் மீது குவியப்படுத்தும் (focus) போது பொருளில் இருந்து தெறிப்படையும் ஒளிக்கதிர்கள் (Light rays) கமெராவின் வில்லைகளின் (lens) ஊடாக பயணித்து ஆடி ஒன்றில் (flip-up mirror) தெறிப்பு அடைந்து கமெராவின் பார்வைப்பகுதியை (view finder) அடைந்து விம்பமாக (image) பிரதிபலிக்கின்றன. பார்வைப்பகுதியில் தெரியும் விம்பத்தை அவதானித்து எமது புகைப்பட தேவைக்கு ஏற்றவாறு கமெராவை சரிசெய்து (adjusting the settings) கமெராவின் பொத்தானை (shutter button) அழுத்தும் போது தெறிப்பு வில்லையானது ஒளிக்கதிரின் பாதையில் இருந்து விலகி விம்பமானது உணரியின் (sensor) மீது படுவதற்கு வழி அமைக்கும். அதே வேளையில் உணரிக்கு முன்னால் இருக்கும் மூடியானது (shutter) திறந்து கொள்ளும். இந்த இரண்டு செயற்பாடுகளும் ஒரே கணத்தில் நடைபெறும்.
வில்லையின் ஊடாக உட்புகும் ஒளியின் அளவானது துவாரம் (Aperture) ஒன்றின் ஊடாக கட்டுப்படுத்தப்படக் கூடியது . மேலும் உணரிக்கு முன்னால் இருக்கும் மூடியானது திறந்து மூடும் வேகமும் (shutter speed) கட்டுப்படுத்தப்படக் கூடியது. துவாரத்தின் அளவும் (Aperture), மூடியானது திறந்து மூடும் வேகமும் (shutter speed) புகைப்படம் ஒன்றின் தன்மையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. இவை பற்றி பிறிதொரு பதிவில் விபரமாக பார்க்கலாம்.
உணரியானது தன் மீது படும் ஒளிக்கதிர்களை ஏற்றம் பெற்ற இலத்திரன்களாக (charged electrons) மாற்றும். பொருளில் இருந்து வரும் ஒளிக்கதிரின் செறிவு, தன்மை என்பனவற்றிற்கு ஏற்ப ஒவ்வொரு இலத்திரனின் ஏற்ற அளவும் வேறுபடும். ஏற்றம் பெற்ற இந்த இலத்திரன்கள் அனலாக் தரவுகளாக (analog data) சேமிக்கப்படும். பின்பு இவை எண்ணியல் தரவுகளாக (digital data) மாற்றி ஒன்றின் (ADC - Analog to Digital Converter) மூலம் மாற்றப்பட்டு சேமிக்கப்படும். பின்பு இத்தரவுகளில் உள்ள தேவையற்ற புள்ளிகள் நீக்கப்படும். மேலும் இவை பல்வேறு வடிகட்டிகள் (filters) ஊடாக செலுத்தப்பட்டு படத்தின் வெளிர் நிர்ணயம் (white balance), நிறம் (colour) என்பன செம்மைப்படுத்தப்படும். இந்த செயற்பாடனது எண்ணியல் விம்ப நிரலாக்கம் (digital image processing) எனப்படும். இவ்வாறு செம்மைப்படுத்தப்பட்ட எண்ணியல் விம்பமானது (digital image) நினைவகத்தில் (memory card) சேமிக்கப்படும்.
பழைய புகைப்படச்சுருள் கமெராக்களில் (film camera) உணரி அமைந்து இருக்கும் இடத்தில் சுருள் (film) இருக்கும். ஆகவே சுருளின் மீது விம்பம் நேரடியாக பதிவாகும். நவீன எண்ணியல் கமெராக்களில், இந்த உணரி பட உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
உணரியானது மில்லியன் கணக்கான நுண்ணிய ஒளி உணர் புள்ளிகளால் (sensor points) ஆனது.
இந்த நுண் உணர் புள்ளிகள் சிலிக்கான் சில்லுகளால் (chips) வடிவமைக்கப்பட்ட நிரல்களாலும் (columns), நிரைகளாலும் (rows) ஆன அணிகளாகும் (arrays). ஒவ்வொரு நுண் உணரிப்புள்ளியும் பிக்சல் (pixel) என அழைக்கப்படும். இவ்வாறான ஒரு மில்லியன் புள்ளிகளின் (one million pixel) சேர்க்கையானது ஒரு மெகா பிக்சல் (one megapixel) எனப்படும். உதாரணமாக ஒரு உணரி (sensor) 2048 நிரல்களாலும் (columns), 3072 நிரைகளாலும் (rows) ஆன அணியால் (array) வடிவமைக்கப்பட்டது எனில், அந்த உணரியானது 6291456 (2048 X 3072) நுண் உணர்புள்ளிகளைக் (pixel) கொண்டிருக்கும். அதாவது இந்த உணரி 6291456 நுண் உணர்புள்ளிகளை (pixel) உள்ள ஒரு ஒளிப்படத்தை பதிவு செய்யும் திறன் உள்ளது. அண்ணளவாக இது 6.3 மெகா பிக்சல் (megapixel) ஆகும்.
மேலே குறிக்கப்பட்ட உணரியால் உருவாக்கப்பட்ட புகைப்படக்கருவியானது 6.3 மெகா பிக்சல் கமெரா எனப்படும் (6.3 MP Camera).
தற்காலக் கமெராக்களில் பொதுவாக CCD (charged coupled device), CMOS (complementary metal oxide semiconductor) என இரண்டு வகையான உணரிகள் (sensors) பயன்படுத்தப்படுகின்றன. CMOS உணரியானது மிகவும் மலிவானது. மேலும் அது குறைந்த அளவிலான மின்னாற்றலில் (power) இயங்கக் கூடியது. CCD உணரியானது மிகத்துல்லியமான படங்களை உருவாக்கவல்லது. ஆனால் இதன் விலை அதிகம். மேலும் இதன் இயக்கத்திற்கு அதிக மின்னாற்றல் (power) தேவை. ஆகவே CCD உணரியை உடைய கமெராக்களின் தரமும் விலையும் CMOS உணரியை உடைய கமெராக்களின் விலையையும் தரத்தையும் விட அதிகம்.

மர்மமா இருக்குது!

மர்மமான சூழலில் இருக்கும் மற்றும் மர்மமான முறையில் இயங்கும் இடங்கள் உலகில் ஏராளம். அதில் குறிப்பிட வேண்டிய சில முக்கியமான இடங்கள்! 
அயர்ன் மவுன்டைன்:

எதிர்காலத் தேவைக்காக விதைகளைச் சேகரித்து வைக்கும் விதை வங்கிமாதிரி, தகவல்களைப் பாதுகாத்து வைக்கும் இடம். அமெரிக்காவின் போஸ்டன் நகரின் மலை அடிவாரம் ஒன்றில் அமைந்திருக்கும் இந்த இடத்தில்தான் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா போன்ற பல்வேறு நாடுகளின் முக்கியமான நிறுவனங்கள், வங்கிகள், புகைப்படங்கள், அரசு சார்ந்த ஆவணங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கிறார்கள். உலகின் அரிய பொக்கிஷங்கள், உலகப் புகழ்பெற்ற 27 மில்லியன் புகைப்படங்களின் ஒரிஜினல் நெகட்டிவ் என நாளைய சந்ததியினருக்குத் தேவையான வரலாற்று ஆதாராங்களை (?!) இவ்விடத்தில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். 1951-ல் ஹெர்மென் என்பவரால் துவங்கப்பட்ட இந்த அயர்ன் மவுன்டைன்னில், உலகின் முக்கியமான டேட்டா பேஸ்களில் இருந்து, வங்கிகளின் முக்கியமான கையெழுத்து நகல்களையும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். பில்கேட்ஸ் போன்ற பெரும் பணக்காரர்களின் முக்கியமான ஆவணங்கள் இங்கேதான் இருக்கிறதாம். இப்படி உலகின் மொத்தத் தரவுகளையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் இந்த நிறுவனம், ஆவணங்களைப் பாதுகாக்கும் வசதிகளுக்காக ஒற்றை வாசலோடு மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டிருக்கிறது.

கோகோ கோலா-சீக்ரெட் ரெசிபி: 

ஏறத்தாழ 200 நாடுகளைச் சேர்ந்த இரண்டு பில்லியன் மக்கள் கோகோ கோலாவைக் குடிக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிபரம். இன்றைய தேதிக்கு உலகின் மதிப்புமிக்க பிராண்ட் கோக்தான்! இத்தனை சிறப்புமிக்க கோக் எப்படி உருவாகிறது? என்று கேட்டால், கோலா கொட்டைகள் மற்றும் இலைகளைக்கொண்டு உருவாக்கப்படுகிறது என்று பதில் வருவதோடு, ‘இது தவிர ரகசியமான ஒன்று கலக்கப்படுகிறதுஎன்ற பதிலும் வரும். அந்த ரகசியமான பொருள் என்ன என்பதுதான் இன்றுவரை தொடரும் மர்மம். கோகோ கோலாவில் கலக்கப்படும் ரகசிய ரெசிபி பற்றிய குறிப்புகள் தாங்கிய பெட்டி ஒன்று கோகோ கோலா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. பார்வையாளர்களுக்கு அந்தப் பெட்டியைப் பார்க்கும் அனுமதி இருக்கிறதே தவிர, பெட்டிக்குள் இருக்கும் ரெசிபி குறிப்பினைப் பார்க்க அனுமதி இல்லை!
நாஸ்கா கோடுகள்: 

அவ்வப்போது படிக்கும் பயிர் வட்டங்கள்பற்றிய மர்மத்தைப் போல, பெரு நாட்டில் காணப்படும் அடையாளங்களுக்கு நாஸ்கா கோடுகள் என்று பெயர். விமானத்தில் பறந்தபடி பார்த்தால் மட்டுமே முழு உருவத்தையும் பார்க்க முடியும். அந்த அளவுக்குப் பெருத்த உருவங்கள் குரங்கு, பறவை, சிலந்தி என உயிரினங்களின் உருவங்களாகவும், மாறுபட்ட சங்கேத உருவங்களாகவும் பொறிப்பட்டிருக்கின்றன. மனிதர்களால் உருவாக்க சாத்தியம் இல்லாத இவற்றை ஏலியன்கள் வரைந்திருப்பார்கள் என்பது ஒரு வாதம். வானத்தில் இருந்து கடவுள் பார்ப்பார்என்ற நம்பிக்கையில் மக்கள் இதை வரைந்திருப்பார்கள் என்பது இன்னொரு வாதம். இன்றுவரை தொடரும் மர்மமான நாஸ்கா கோடுகள் 1553-ம் ஆண்டு முதல்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
பங்கார் கோட்டை: 

இராஜஸ்தானில் இருக்கும் இந்தக் கோட்டை நம்ம ஊர் பேய்க்கதையைப் போல பிரசித்தி பெற்றது. இந்தியாவின் பயங்கரமான இடமாகக் கருதப்படும் இது, 1573-ல் கட்டப்பட்டதாம். இந்தக் கோட்டையில் வாழ்ந்த மக்கள் எல்லோரும் மந்திரவாதி ஒருவரால் சபிக்கப்பட மர்மமான முறையில் இறந்தார்கள். அப்புறமென்ன? வழக்கம்போல இறந்தவர்கள் அனைவரும் ஆவியாக அலைந்து திரிய, இன்றுவரை இரவில் யாரும் இந்த கோட்டைப் பக்கம் தலை வைத்துப் படுப்பதில்லையாம்!


Saturday, January 9, 2016

இந்தியா மற்றும் இந்தியர்களை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லாத பல விசயங்கள்..!!!

1. அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களில் 33% பேர் இந்தியர்கள்.
2. அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகளில் 12% பேர் இந்தியர்கள்.
3. உலகில் உள்ள ஐ.பி.எம் (IBM) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 23% பேர் இந்தியர்கள்.
4. அமெரிக்க விண்வெளித்துறை நாசா"வில் (NASA) பணிபுரிபவர்களில் 36% பேர் இந்தியர்கள்.
5. உலகில் உள்ள இன்டெல் (INTEL) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 17% பேர் இந்தியர்கள்.
6. உலகில் உள்ள மைக்ரோசாப்ட் (MICRO SOFT) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 34% பேர் இந்தியர்கள்.
7. உலகின் அனைத்து மொழிகளுக்கும் வேராக முதல் தோன்றிய மொழி என்று எடுத்துக்கொள்ளப்படும் தமிழ் ஒரு இந்திய மொழி..
8. சமஸ்கிருதம் (SANSKRIT) தான் அனைத்து ஐரோப்பிய மொழிகளுக்கும் வேர் மொழி.
9. ஹாட் மெய்ல்"ஐ (HOT MAIL) உருவாக்கியவரும் ஸ்தாபித்தவருமான சபீர் பாட்டியா (SABEER BHATIA) ஒரு இந்தியர்.
10. பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவரான ஆர்யபட்டா (ARYABHATTA) ஒரு இந்தியர்.
11. எண்ணியல் முறையை உருவாக்கியவர்கள் இந்தியர்கள்.
12. அல்ஜீப்ரா"வை (ALGEBRA) உருவாக்கியவர்கள் இந்தியர்கள்.
13. சதுரங்க (CHESS) விளையாட்டை உருவாக்கியது இந்தியா.
14. இந்தியாவின் சமஸ்கிருத மொழி கணிணி மொழியுடன் மிகவும் ஒத்து போவதாக போர்ப்ஸ் (Forbes magazine) பத்திரிக்கை 1987"ல் அறிவித்தது.
15. நுண் கணிதம் (CALCULUS) உருவாக்கியது இந்தியா.
16. திரிகோணமிதி (TRIGNOMETRY) உருவாக்கியது இந்தியா.
17. கூகுள்"ன் (GOOGLE) தற்போதைய தலைமை செயல் அதிகாரி (CEO) சுந்தர் பிச்சை ஒரு இந்தியர்.
18. ஹெச்.பி"யின் HEWLETT PACKARD (HP) பொது மேலாலர் ராஜீவ் குப்தா ஒரு இந்தியர்.
19. இன்று உலகில் உள்ள கணிணியில் பயன்படுத்தக்கூடிய பென்டியம் சிப் (PENTIUM CHIP) உருவாக்கிய வினோத் தாம் ஒரு இந்தியர்.
20. பை (PI) 3.14 "க்கான கணக்கீட்டை உருவாக்கிய புத்யானா (BHUTHYANA) ஒரு இந்தியர். ஐரோப்பிய கணக்கியல் உருபவாக்கத்திற்கு முன்பு 6"ஆம் நூற்றாண்டுகளிலேயே இதற்கான விளக்கத்தை உருவாக்கியவர்.
21. இந்தியாவில் தான் உலகிலேயே மிக அதிகமாக 5600 செய்தித்தாள்களும் 3500 வார மற்றும் மாத இதழ்களும் 1 கொடியே 20 லட்சம் வாசகர்களால் வாசிக்கப்படுகின்றன.
22. 2600 ஆண்டுகளுக்கு முன்பே செயற்கை உடலுருப்பு, எலும்பு முறிவு, சிறிநீரக கற்கள் மற்றும் தலையின் மண்டை ஒட்டை பிளந்து மூளையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சுஸ்ருதா (SUSRUDHA) ஒரு இந்தியர்.
23. உலகிலேயே விலை உயர்ந்த 700 கோடி (70 MILLION POUNDS) ரூபாய் மதிப்புள்ள வீட்டை இங்கிலாந்தில் வைத்திருக்கும் இரும்பு தொழில் அதிபர் லட்சுமி மிட்டல் ஒரு இந்தியர்.
24. உலகின் 4 ஆவது பலமான ராணுவத்தை கொண்டது இந்தியா.
25. மிக அதிகமான போர் வீரர்களை கொண்ட ராணுவத்தின் வரிசையில் 2 ஆம் இடம் இந்தியாவுக்கு.
26. இன்று உலகமே பயன்படுத்திக் கொண்டிருக்கும் மின் அஞ்சலை (E Mail) உருவாக்கியபவர் சிவா ஐயாத்துரை என்ற இந்தியர்.
27.ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்கள் சொன்னது : உலகின் மற்ற பகுதிகளில் மிகப்பெரிய தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்திலே பூஜ்ஜியத்தையும் கணிதத்தையும் உருவாக்கி நமக்கு எண்ணுவதற்கு வழி காட்டிய இந்தியர்களுக்கு நாம் நிறைய கடமைப்பட்டுள்ளோம்.

Friday, January 8, 2016

படித்தால் அறிவு வருமா ?


விளக்கம் ;

படித்தால் அறிவு வராது ?ஏன் ?வரும் என்றால்,வந்தது ஒரு நாளைக்குப் போகும் என்பது "சித்தாந்தம்"அறிவு என்பது ஏரி ஜலம்போல் எங்காவதுதேங்கியிருக்கின்றதா?அல்லது கடைகளில் விற்கின்றதா ?அறிவு விற்பதாயின் தனவந்தர்கள் (பணக்காரர்)ஒரு கிலோ ஆயிரம் (லட்சம்)ரூபாய் ஆனாலும் வாங்கித் தன் பிள்ளைகளுக்குக் கொடுத்து விடுவார்களே !ஆகவே ,அறிவு விளைகின்றபொருளுமன்று ;ஒரு புறமிருந்து மற்றொரு புறம் வருகின்ற பொருளுமன்று .
கற்கண்டில் தித்திப்பு இருப்பது போலவும் மலரில் மணம் இருப்பது போலவும் ஆன்மாவில் அறிவு இருக்கின்றது.ஆன்மாவே அறிவிப் பொருள்தான்.
"பாராதி பூதம்நீ அல்லை உன்னிப் 
பார்இந் திரியம் கரணம்நீ அல்லை 
ஆராயும் உணர்வுநீ என்றான் -ஐயன் 
அன்பாய் உரைத்தசொல் ஆனந்தம் தோழி."
-
தாயுமானார்.
கற்கண்டில் வேப்பெண்ணெய் தடவி விட்டால் அதன் இனிப்பை வேப்பெண்ணெய் தடுத்து நிற்கும்.
எலெக்ட்ரிக் பல்பின் மீது தார் பூசிவிட்டால் அதன் ஒளியைத் தார் தடுத்து நிற்கும்.அதுபோல் ஆன்மாவின் அறிவுப் பிரகாசத்தை அறியாமையாகிய ஒன்று தடுத்து மறைத்திருக்கின்றது.அவ்வாறு மறைத்திருக்கின்ற அறியாமை படிப்பதனால் விலகுகின்றது.துணியில் உள்ள வெண்மையாகிய உண்மையை அழுக்கு மறைத்திருக்கின்றது.
சவுக்காரமிட்டுத் (சோப்பு)துணியைத் துவைப்பதானால் அழுக்கு நீங்கியவுடன் அதன் இயற்கையாகிய வெண்மையைத் துணி அடைகின்றது.
மறைந்திருக்கின்ற மணலை எடுத்தவுடன் "" நீர் "" ஊற்றெடுத்து வெளிப்படுவதுபோல் மறைத்திருக்கின்ற அறியாமை நீங்கியவுடன் ""அறிவு""வெளிப்பட்டுத் தோன்றுகின்றது.
'இல்லது தோன்றாது,உள்ளது சிதையாது ;என்பது சத்காரியவாதம்.
ஆகவே,ஆன்மாவில் இல்லாத,அறிவு நூதனமாகத் தோன்றுவதில்லை.
எனவே ,படித்தால் அறிவு வராது என்பது முடிந்த முடிவு.படித்தால் அறியாமை தேயும் ;உள்ள அறிவு வெளிப்படும் 
அகவே ஆன்மீக புத்தகம் படியிங்கள் 
படித்ததில் பிடித்ததை பகிருங்கள் தெளிவு கிடைக்கும் 
"
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் 
கற்றனைத்து ஊறும் அறிவு.
-
குறள்.
விளக்கம் ;தெய்வத்திரு வாரியார் சுவாமிகள்.

Tuesday, January 5, 2016

மக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ள சில அமானுஷ்ய இடங்கள்!!!



வட சென்டினல் தீவு (North Sentinel Island) 


வங்காள விரிகுடாவில் இருக்கும் அந்தமான் தீவுகளில் ஒன்று தான் இந்த வட சென்டினல் தீவு. ஏறத்தாழ 28 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட ஓர் சின்ன தீவு தான். இங்கு இன்றும் வெளியுலகம் தெரியாத காட்டுவாசிகள் வாழ்ந்து வருகிறார்கள்.

ஓர் நேஷனல் ஜியாக்ராபிக் (national geographic) இயக்குனர் இவர்களை படம்பிடிக்க, தொடர்புகொள்ள அனுமதி கோரியது. ஆனால், இந்திய அரசு அவர்களை தொடர்புக்கொள்ள அனுமதி வழங்க மறுத்துவிட்டது.

லாஸ்குக்ஸ் குகைகள் (Lascaux Caves)


தெற்கு பிரான்ஸ் பகுதியில் அமைந்திருக்கிறது இந்த லாஸ்குக்ஸ் குகைகள் (Lascaux Caves).இங்கு ஏறத்தாழ 20,000 வருடங்களுக்கும் பழமையான ஓவியங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவை மிருகங்களின் ஓவியங்கள் தான். மார்செல் ரவிதத் எனும் 18 வயது இளைஞன் இந்த குகையை கடந்த 1942-ம் ஆண்டு தன் நண்பர்களுடன் கண்டுபிடித்தான்.
 
பிறகு இவனது நண்பர்களுடன் ஊருக்குள் சென்று இப்படி ஒரு குகையை கண்டதை கூறினான். 1948-ம் ஆண்டு இந்த குகை மக்களுக்காக திறந்துவிடப்பட்டது. ஆனால் மக்களிடம் இருந்து வெளிப்படம் CO2 இந்த ஓவியங்களை அழிக்கிறது என்பதால் யுனெஸ்கோ இந்த இடத்திற்கு மக்கள் செல்ல 1963-ம் ஆண்டு தடைவிதித்தது.
 
மெட்ரோ 2 (Metro 2)
மாஸ்கோவில் இருக்கும் ஓரிடம் தான் இந்த மெட்ரோ 2. இதன் கோட் பெயர் D-6. இந்த இடத்தில் 30,000 மக்களை தங்க வைக்க முடியும். இது கிரெம்ளினிலிருந்து எப்எஸ்பி தலைமையகம் வரை செல்ல வழியை இணைக்கிறது. இந்த இடமும் தடை செய்யப்பட்டு இருக்கிறது.

ஐஸ் கிராண்ட் புனிதப்பள்ளி (Ise Grand Shrine)

பி.சி நான்காம் நூற்றாண்டில் இருந்து இந்த புனிதப்பள்ளி இருப்பதாய் கூற்றுகள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் இருக்கும் நூற்றுக்கணக்கான புனிதப்பள்ளிகளில் இது மிகவும் அச்சமிக்க இடமாக கருதப்படுகிறது. ஜப்பானின் ஏகாதிபத்திய குடும்ப நபர்களை தவிர இந்த இடத்திற்கு வேறு யாரும் செல்ல முடியாது.

அரச குடும்பத்தை தவிர இந்த இடத்தினுள் என்ன இருக்கிறது என வேறு யாரும் கண்டதில்லை. வெளியில் இருந்து இதன் கூரையை தவிர வேறு எதையும் மக்கள் கண்டதில்லை என இவ்விடத்தை சுற்றி இருக்கும் மக்கள் கூறுகிறார்கள்.

கிழக்கு ரெண்வெல், சாலமன் தீவுகள் (East Rennell, Solomon Islands)

கிழக்கு ரெண்வெல், சாலமன் தீவுகள் (East Rennell, Solomon Islands) கிழக்கு ரெண்வெல் தீவுகள் யுனெஸ்கோவால் உலக மரபு இடமாக அறிவிக்கப்பட்ட ஒன்றாகும். இங்குள்ள உள்ளூர் மக்களால் இந்த இடத்தில் இராட்சத மனிதர்கள் இருப்பதாகவும், அவர்கள் தலையை கொய்து நரமாமிசம் உண்பவர்கள் என்றும் நம்பப்படுகிறது.

ஈஸ்டர் தீவு, சிலி (Easer Island, Chile) 
பசிபிக் கடல் பகுதியில் அமைந்திருக்கிறது இந்த ஈஸ்டர் தீவு. உலகில் உள்ள தனிமைப்படுத்தப்படுள்ள இடங்களில் இதுவும் ஒன்று. இது சிலியுடன் இணைந்திருக்கும் ஓர் பகுதி. பண்டைய காலம் முதலே இந்த இடம் மக்களை தனிமைப்படுத்தி வைக்கும் விதத்தில் தான் அமைக்கப்படிருந்ததாக கூறப்படுகிறது.

பாம்புகள் தீவு (Snake Island) 
பிரேசிலில் இருக்கும் ஸ்ம் பாலொ கடற்கரை பகுதியில் அமைந்திருக்கிறது இந்த பாம்புகள் தீவு. ஒவ்வொரு சதுர அடியிலும் ஒரு பாம்பையாவது நீங்கள் இங்கு காண முடியும். கோல்டன் பிட்வைப்பர் (Golden Pit Viper) எனும் வகையை சேர்ந்த பாம்புகள் தான் இங்கு அதிகமாக இருக்கின்றன.

பிரேசிலின் கப்பற்படை அதிகாரிகள் இந்த தீவையும், இந்த வகை பாம்புகளையும் காக்க, இந்த இடத்தை மூடி வைத்துள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மட்டுமே இந்த தீவிற்கு சென்று வர முடியும். பொது மக்களுக்கு அனுமதி இல்லை. மேலும் இங்கு செல்ல முன்கூட்டியே சிறப்பு அனுமதி பெறவேண்டும்.

போவேக்லியா, இத்தாலி (Poveglia, Italy)

வடக்கு இத்தாலி பகுதியில் வெனிஸ் மற்றும் லிடோ இடங்களுக்கு மத்தியில் அமைந்திருக்கிறது இந்த சிறிய தீவு. 1348-ம் ஆண்டு இங்கு ஏற்பட்ட ஓர் பிளேக் நோய் தொற்றினால் மக்கள் பெரும்பாலானோர் இந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும், இங்கு இருந்தவர்கள் இப்போது வெனிஸ் பகுதியில் வசிப்பதாகவும் கூறப்படுகிறது.

பிளேக் நோயால் இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் என்றும் அவர்களை பெரிய பெரிய பிணத்தை எரிக்கும் கட்டைகளை வைத்து ஒட்டுமொத்தமாக எரித்தனர் என்றும் கூறுகிறார்கள். இன்றளவும் இந்த இடத்திற்கு செல்ல மக்கள் அஞ்சுவதாக கூறப்படுகிறது.