Tuesday, January 24, 2017

நாட்டுநாய்

பட்டி நாய் :

நாட்டுநாய் என்று அழைக்கப்படுவது. நோய் எதிர்ப்பு, பஞ்சம் தாங்குதல் ஆகியவற்றின் உச்சகட்டம். மசை பிடித்தாலும் முடிந்தளவு உரிமையாளரைக் கடிக்காது. ஆடு, மாட்டுப்பட்டிகளில் குருவிகளைக்கூட அண்ட விடாது.
விசுவாசத்திற்குப் பெயர் போனது.
சர்க்கார் பல பரதேச நாய்களைக் கொண்டுவர அனுமதித்து இவ்வினத்த்தின் தன்மையைக் கெடுத்துவிட்டது. Shepherd dog.

பட்டிநாயின் சில குணாதிசயங்கள்:

1.குழந்தைகளைக்கண்டு பொறாமைப்படாது, மாறாக அவர்களைக் காக்கும்.

2.எஜமானருக்கு ஆபத்தென்றால் (பாம்புகள் போன்றவற்றால்) உயிரைக்கொடுத்துக் காப்பாற்றும்.

3.பிறர் உணவளித்தால் சரியாக உண்ணாது, அளித்தாலும் எஜமானரைத்தான் விசுவாசிக்கும்.

4.விஷ ஜந்துக்கள் கடித்தால், மூலிகைகளை உண்டு உயிர் தப்பிக்கொள்ளும்

5.இறக்கும் தருவாயில் எஜமானரை விட்டு விலகிச்சென்றே இறக்கும். (துக்கப்படக்கூடாதென்று).
எதைக் கொடுத்தாலும் மகிழ்ச்சியாக உண்ணும்.

6.ஆஸ்துமா, ஈசினோபிலியா போன்ற நோய்கள் சீமை நாய் சங்கார்த்தத்தால் பரவுகின்றன.

7.நமது பாவங்களை தான் வாங்கிக்கொள்ளும்.

8.எஜமானர் உயிருக்கு ஆபத்தெனில், தான் பாவத்தை வாங்கிக்கொண்டு இறக்கும். எமனையும், பிற சக்திகளையும் காணக்கூடிய வல்லமை உள்ளதால் பைரவர் - கர்ம வினையின் அதிபதியின் வாகனமாக கையாளப்படுகிறது. பைரவரை நமஸ்கரித்தால்தான், கர்மவினை பந்தங்கள் அழியும்.

9.பட்டி பொங்கலன்று (மாட்டுப் பொங்கல்), ஒரு பாகம் பொங்கல் பட்டிதெய்வ பிரசாதமாக பட்டி நாய்க்கு வழங்கப்படும். பிற கோயில் பிரசாதங்களை வழங்க மாட்டார்கள்.

10. நமது நாய்க்குக்கூட, இப்பேர்பட்ட நல்ல குணங்கள் உள்ளன. ஆனால் நாமோ இவற்றைப் புறக்கணித்தும், வஞ்சித்தும் சீமை கண்றாவிகளை விரும்புகிறோம்.
பழக பழக பாலும் புளிக்குமாம்.

நாட்டு நாய் வளர்த்துவோம்.
சீமை நாயை புறகணிப்போம்.

Thanks - Pon Dheepankar Krishnamurthi
PC - Vikatan News
To Know More About Native Breeds..
Go through
http://tamilnaducattle.blogspot.in

No comments:

Post a Comment