Friday, February 27, 2015

ஆசியாவிலேயே மிக பெரிய தொலைநோக்கி எது வென்று தெரியுமா?

வைணு பாப்பு தொலைநோக்கி காவலூர், வேலூர் மாவட்டம தமிழ்நாடு
வைணு பாப்பு வானாய்வகம் (Vainu Bappu Observatory) தமிழ்நாட்டின் காவலூரில் அமைந்துள்ளது. இது, இந்திய வானியற்பியல் நிலையத்தின் முதன்மை வானாய்வகம் ஆகும். இந்தியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி இங்கு இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் (Indian Institute of Astrophysics) நிறுவப்பட்டுள்ளது. இது அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியால் திறந்துவைக்கபட்டது. இந்திய இயற்பியலாளர், இந்திய வானியல் முன்னோடியான வைணு பாப்பு அவர்களின் வானியல் பங்களிப்புக்காக இப்பெயர் சூட்டப்பட்டது. இங்குள்ள 2.34 மீட்டர் விட்டமுடைய தொலைநோக்கி ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும். இது 1986-ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு விடப்பட்டது.
1786 ஆம் ஆண்டு வில்லியம் பெட்ரி என்பவர் சென்னை எழும்பூரில் உள்ள தனது வீட்டுத் தோட்டத்தில், அவரது தனிப்பட்ட ஆய்வுக்காக அமைத்த ஆய்வகத்தில் இருந்து இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தின் தோற்றம் தொடங்குகிறது. இந்த ஆய்வகம் மெட்ராஸ் வானியல் ஆய்வகம் என்றழைக்கப்பட்டது. பின்னர் 1899 ஆம் ஆண்டு முதல் இந்த ஆய்வகம் கொடைக்கானலுக்கு இடம் பெயர்ந்து கொடைக்கானல் வானியல் ஆய்வகமாக செயற்படத் தொடங்கியது.
1960 ஆம் ஆண்டில் வைணு பாப்பு கொடைக்கானல் வானியல் ஆய்வகத்தின் இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார். வானில் உள்ள விண்வெளிப் பொருட்களை உற்று கவனிக்க ஏற்ற இடமாக ஜவ்வாது மலையில் உள்ள சிறிய கிராமமான காவலூரை இவரே கண்டறிந்தார். காவலூரில் வானியல் ஆய்வகம் அமைக்கப்பட்ட காரணத்தினால் இது காவலூர் வானியல் ஆய்வகம் என்று பெயர் பெற்றது. பின்னர் இது நிறுவனமாக தன்னாட்சி பெற்று இதன் தலைமையிடம் பெங்களூருக்கு மாற்றப்பட்டு புதிய இந்திய வான் இயற்பியல் மையமாக உருவானது.
இதன் முலம் நடந்த கண்டுபிப்புகள்.
1972 - வியாழன் கோளின் நிலாவான கானிமீடிற்கு வளிமண்டலம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
1977 - யுரேனசு கோளைச் சுற்றி வளையம் இருப்பது. ( இந்த நோக்குதல் பட்டாச்சார்யா, குப்புசாமி ஆகியோரால் பார்க்கப்பட்டது; வைணு பாப்புவினால் தந்தியனுப்பப்பட்டு அனைத்துலக வானியல் சங்கம் - ஐ ஏ யூ-வினால் பதிவு செய்யப்பட்டுள்ளது )
1988 பிப்ரவரி 17 அன்று ஒரு சிறுகோள் (minor planet) ராஜமோகன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது -- இந்தியா கண்டுபிடித்த இருபதாம் நூற்றாண்டின் முதல் (சிறிய) கோள் அதுவே -- அதற்கு 4130 ராமானுஜன் என்று பெயரிடப்பட்டுள்ளது [கணித மேதை ராமானுஜனினின் நினைவாக.
1984 - சனி கோளைச் சுற்றி ஒரு மெல்லிய கோள்வெளி வளையம் உள்ளது காவலூரிலிருந்து முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஒவ்வொரு சனிக்கிழமையும் மதியம் 2 மணியிலிருந்து 5 மணி வரை வைணு பாப்பு தொலைநோக்கி எவ்வாறு இயங்குகிறது என்பது பற்றி பார்வையாளர்களுக்கு காட்டப்படும்; வானம் தெளிவாக இருப்பின் 15 செ.மீ பார்வையாளர் தொலைநோக்கி மூலம் இரவு வானம் காட்டப்படும். [பி.கு.: பார்வையாளர் வருகை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது -- பின்னறிவிப்பு வரும் வரை]
2009 நவம்பர் 4 முதல் 6 வரை 2.34 மீ முதன்மை ஆடிக்கு அலுமினியம் பூச்சேற்றப்பட்டது. இவ்வாடியின் நிறை 3.5 டன்கள் ஆகும்.

No comments:

Post a Comment