Wednesday, August 31, 2016

வீட்டில் இயற்கை உரம் தயாரித்தல்

ஒரு பிளாஸ்டிக் வாளி அல்லது தொட்டி (மண், சிமிண்ட், பிளாஸ்டிக்) எடுத்துக் கொள்ளவும். அதன் அடியில் சிறு துவாரங்கள் இட வேண்டும். துவாரமானது காற்றோட்டத்திற்கும் அதிகப்படியான தண்ணீர் வெளியேறுவதற்கும் உதவும்
.
பின் அதில் ஒரு இஞ்ச் உயரத்திற்கு சிறு சிறு கற்களை பரப்பவும். அதன் மீது ஒரு இஞ்ச் உயரத்திற்கு மணலைப் பரப்பவும். அதன் மீது ஒரு இன்ச் உயரத்திற்கு அந்தப் பகுதியில் கிடைக்கும் மண்ணைப் பரப்பவும்.
 
அதன் மீது தினமும் சேரும் சமையலறைக் கழிவுகள், காய்ந்த இலை சருகுகள், கிழிந்த தாள்கள் (தாள்களை தண்ணீரில் நனைத்து தொட்டியில் போடவும்) ஆகியவற்றைச் சேர்க்கவும். ஆரம்பத்தில் அசைவக் கழிவுகளைத் தவிர்க்கவும்.

அவற்றில் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். ஈரப்பதம் அதிகம் இருந்தால் கழிவோடு சற்று மண்ணைச் சேர்க்கவும். தொட்டி நிறையும் வரை கழிவுகளைச் சேர்த்து வரவும்.தொட்டி நிறைந்தவுடன் தொட்டியை மூடிவிடவும். மூடியின் மீது சிறு துவாரம் இடவும்.


வாரம் ஒருமுறை கழிவுகளை கிளறி விடவும். கழிவுகள் மட்குவதற்கு 30 நாட்களிலிருந்து 60 நாட்கள் வரை ஆகும். நன்கு மக்கிய கழிவுகளிலிருந்து மண்வாசனை வரும். இயற்கை உரம் தயார். இது கருமையான நிறத்தில் இருக்கும்.

No comments:

Post a Comment