Tuesday, December 4, 2012

திரு.ஏ.பி.ஜே. அப்துல்கலாம்

இந்திய இளைஞர்களின் மனதில் ஒரு முன்மாதிரி மனிதராக வீற்றிருப்பவர் திரு.ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவருடைய எளிமையால் இந்தியர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளார். ஆவுல் பகீர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம் (Avul Pakir Jainulabdeen Abdul Kalam), 1931 ம் வருடம் அக்டோபர் 15 ம் தேதி ராமேஸ்வரத்தில் பிறந்தார். தந்தை பெயர் ஜெய்னுலாப்தீன்(Jainulabdeen), தாயார் பெயர் அஷியம்மா(Ashiamma). இந்தியாவின் முக்கியமான விஞ்ஞானியான அ
ப்துல் கலாம், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக 2002 லிருந்து 2007 வரை இருந்துள்ளார். இந்திய வேண்வெளி ஆய்வு மையம் (ISRO), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) ஆகியவற்றிலும் முக்கிய பங்காற்றியுள்ளார்.

அப்துல் கலாமின் பள்ளிப்பருவம்

அப்துல் கலாம் ராமேஸ்வரத்தில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்துள்ளார். இஸ்லாம் சமயத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அப்துல் கலாமின் தந்தை இந்து மத தலைவர்களிடமும் மிகுந்த அன்புகொண்டிருந்தார். அப்துல் கலாமின் குழந்தை பருவத்தில் அவருடைய குடும்பம் மிகுந்த நிதி நெருக்கடியில் இருந்தன. அதற்க்காக அப்துல் கலாம் தன் பள்ளிப்பருவத்தில் வீடு வீடாக நாளிதழ் விநியோகம் செய்து தன் குடும்ப சுமையை குறைத்துள்ளார். வகுப்பில் சராசரி மாணவனாக இருந்தாலும் அவருடைய கடின உழைப்பால் மிக உன்னத நிலையை அடைந்தார்.

அப்துல் கலாமின் கல்லூரி பருவம்

பள்ளிப்படிப்பை முடித்த அப்துல்கலாம் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் சேர்ந்தார். தமிழ்நாட்டின் சிறந்த எழுத்தாளரான சுஜாதா, அப்துல் கலாமுடன் செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தனர். 1954 ம் ஆண்டு இயற்பியல் பட்டம் பெற்ற அப்துல் கலாம் தன்னை ஒரு இயற்பியலாலராக திருப்தியடையவில்லை. 1955 ல் சென்னைக்கு வந்து வான்வெளி பொறியியல் படித்தார். 1960 ம் ஆண்டு MADRAS INSTITUTE OF TECHNOLOGY ல் பொறியியல் பட்டம் பெற்றார்.

கலாம் இயற்கையோடு வாழ்ந்தவர். 1964ஆம் ஆண்டு ஒரு சூறாவளிக் காற்று பாம்பன் பாலத்தையும் அதன் மேலே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஒரு ரயிலையும் கலாமின் சொந்த ஊரான தனுஷ்கோடியையும் இழுத்துச் சென்றது. தண்ணீர் என்பது அழிக்கும் தன்மை வாய்ந்தது என்று அவர் எண்ணிக் கூடப் பார்த்ததில்லை என்று அவருடைய சுயசரிதையான அக்னி சிறகுகள் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விஞ்ஞானி அப்துல்கலாம்

பொறியியல் பட்டம் பெற்ற அப்துல் கலாம் DRDO வின் AERONAUTICAL DEVELOPMENT ESTABLISHMENT ல் தலைமை விஞ்ஞானியாக சேர்ந்தார். அங்கு அவர் இந்திய ராணுவத்திற்கு ஒரு சிறிய ஹெலிகாப்டரை வடிவமைத்தார். “இந்தியாவின் ஏவுகணை மனிதன்” ஏற்று அழைக்கப்படும் அப்துல் கலாம் 1998 ம் ஆண்டு நடந்த பொக்ரான்-II அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றினார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் , மைசூர் பல்கலைக்கழத்தில் வருகைப் பேராசிரியராகவும் இருந்து வருகிறார். மேலும் பல இந்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் சிறப்பு பேராசிரியராக உள்ளார்.

1981 ம் ஆண்டு இந்திய அரசின் பத்ம பூஷன் விருதும், 1990 ம் ஆண்டு பத்ம விபூஷன் விருதும், 1997 ம் ஆண்டு பாரத ரத்னா விருதும் பெற்றார். உலகளவில் 30 பல்கலைகழகங்கள் அப்துல் கலாமிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.

2002 ம் ஆண்டு இந்திய ஜனாதிபதியாக டாக்டர் அப்துல் கலாம் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசத்தின் முதல் குடிமகனாக இருந்தும், பிரம்மச்சாரியான அப்துல் கலாமின் எளிமை அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்ததில் வியப்பில்லை.

No comments:

Post a Comment