Monday, September 21, 2015

நீதி கதைகள் பாகம் 1


ஒரு மீனவன் ஆற்ங்கரையில் உட்கார்ந்து கொண்டு டேப்ரிக்கார்ரடரில் மீன் பற்றிய பாடல்களை பாட விட்டுக் கொண்டிருந்தான்..! பக்கத்தில் கூடை நிறைய மீன்கள் கிடந்தன.
அவன் மீன் பிடித்ததாகவே தெரியவில்லை...!! நீண்ட நேரம் இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவருக்கு இது விநோதமாக தெரியவே, மெல்ல அவனிடம் வந்து.....
நீ என்ன பண்ணீட்டு இருக்கன்னு கேட்டார்...!!
அவன், 'கூடைய பாத்தீங்கல்ல' தெரியலையா மீன் புடிச்சிட்டு இருக்கேன்னு சொன்னான்..!?
அவர் குழம்பிப் போய் வலையும் இல்லை..!! தூண்டிலும் இல்லை..!!! இவ்வளவு மீன் பிடிச்சிருக்கன்னா...??? எப்படிப்பான்னார்...!!
உங்களுக்கு பதில் சொல்லும் போது என்னோட தொழில் பாதிக்கும், ஆனா எப்படியும் உங்களுக்கு தெரிஞ்சிக்கனும்னா.?
நூறு ரூபா குடுங்க சொல்லுரேன்னான்..!!
ஆர்வம் தாங்காம அவரும் நூறு ரூபாய் கொடுத்து விட்டு, இப்ப சொல்லுன்னாராம்...!!
அது ஒன்னுமில்லீங்க மீன் பத்தி இந்த பொட்டீல பாட்டு போட்டுருக்கேன்ல, அத கேட்டு மீன் மயங்குச்சுனா வெறும் கையாலயே புடிச்சி கூடைல போட்டுறலாம்னு காத்துட்டு இருக்கேன்னான்.!
அதை கேட்ட அவர், மேலும் குழப்பமாக, நீ சொல்லுறது நம்புறமாதிரியே இல்லையே'ன்னாராம்...?
அப்புடி எவ்வளவு மீன் பிடிச்சிருக்க...? இந்த கூடைல இருக்கிற மீன் எல்லாம் இப்படித்தான் பிடித்ததான்னு கேட்டார்.
அவன் சிரித்துக் கொண்டே, இந்த கூடைல இருக்குறது வலைபோட்டு புடிச்சது, வலைய மடிச்சி வீட்டுல வச்சிட்டுவர என் மனைவி போயிருக்காங்க அவ திரும்பி வர ரெண்டு மணி நேரமாகும்...!!
அது வரையில சும்மா இருக்காம இந்த முறையில உங்களோட சேர்த்து....!! இன்னைக்கு இதுவரைக்கும் பத்து மீன் புடிச்சிருக்கேன்னு சொன்னான்...!!!!

No comments:

Post a Comment