Monday, September 21, 2015

நீதி கதைகள் பாகம் 2

மூன்று முக்கியமான அரசியல் தலைவர்கள் ஸ்கார்ப்பியோ காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு விபத்து ஏற்படுகிறது. மூன்று பேரும் இறந்துவிடுகின்றனர்.

இவர்களின் மரணத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் எமதர்மராஜா அவர்களை எமலோகத்திற்கு கூட்டிச்செல்கிறான்.

எமராஜா முதல் இருவரையும் சொர்க்கத்திற்கு அனுப்பிவைக்கிறார். கடைசியாக வந்தவரை நரகத்திற்கு அனுப்பிவைக்கிறார்.

"இது என்ன அநியாயமான தீர்ப்பாகவுள்ளது. அவர்களும் தான் நிறைய குற்றங்கள் செய்து உள்ளனர். மக்கள் பணத்தில் சொத்துக்கள் சேர்த்துக்கொண்டுள்ளனர்.

என்னை மட்டும் ஏன் நரகத்திற்கு அனுப்பினீர்கள்"? என அவர் கேள்வி எழுப்பினார்.

சரி உங்களுக்கு நான் ஒரு டெஸ்ட் வைக்கிறேன். அதில் பாசாகிறவர்கள் சொர்க்கத்திற்கு பெயில் ஆகிறவர்கள் நரகத்திற்கு என்றார் எமதர்மராசா. மூவரும் ஒத்துக் கொண்டனர்.

எமராசா முதலாமவரிடம் இந்தியா எப்போது சுதந்திரம் பெற்றது என்ற கேள்வியை கேட்டார். 1947 என்று சரியான விடையை சொன்னார். அவர் பாசாகிவிட்டதால் சொர்க்கத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

இரண்டாமவரிடம் சுதந்திரப் பேராட்டத்தின்போது எத்தனைபேர் இறந்தனர். மூன்று விடைகளில் ஒன்றை தேர்தெடுக்கலாம் என்றார். 1,00,000 / 2,00,000 / 3,00,000. AA -2,00,000 என்ற சரியான விடையை தேர்தெடுத்ததால் சொர்க்கத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

மூன்றாமவரிடம் சுதந்திரப் பேராட்டத்திற்காக இறந்த இரண்டு இலட்சம் பேர்களின் பெயர்களை எழுதுக என்றார் எமதர்மராசா.
அவருக்கு பதில் தெரியாததால் பெயிலாகிவிட்டார். நரகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

‪#‎கதையின்_நீதி‬ : தலைமை(MANAGEMENT) என்ன முடிவெடுக்கிறதோ அதை எப்படியும் செயல்படுத்தியே தீரும்.

No comments:

Post a Comment