Tuesday, November 8, 2016

சூரிய ஒளி, காற்றில் இயங்கும் எளிய மின்விசிறி வடிவமைப்பு



தரங்கம்பாடி :
சூரிய ஒளி மற்றும் காற்றினால் இயங்கும் எளிய மின் விசிறியை தரங்கம்பாடி ஹைடெக் ஆராய்ச்சி மையத்தின் பயிற்சி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.
நாகை மாவட்டம் தரங்கம்பாடி ஹைடெக் ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர் ஜெயராஜ் கூறியதாவது: மாணவர்கள் புருசோத்தமன், மங்களராஜ், விவேக் ஆகியோர் பத்தாம் வகுப்பு மட்டுமே முடித்துள்ளனர். மேலும் வெல்டிங்கில் சிறந்த அனுபவம் பெற்றுள்ள இவர்கள் ஆராய்ச்சியாளர்களின் வழிகாட்டுதல்படி இந்த எளிய மின்விசிறியை வடிவமைத்துள்ளனர்.

சூரிய ஒளி இருக்கும் வரை எந்தவித செலவும் இல்லாமல் ஜீரோ பட்ஜெட்டில் மின் விசிறியை இயக்கலாம். சூரிய ஒளி மறைந்தாலும் இந்த மின் விசிறியின் இயக்கம் நின்று விடாது. சிறிய காற்றாலைகள் மூலம் இரவு நேரத்திலும் மின் விசிறி ஓடும் என்பது இதன் மிக முக்கிய சிறப்பம்சம். மிகச் சாதாரணமாக வீசும் காற்றின் வேகமே மின் விசிறியை சுழற்ற போதுமானது. எனவே பேட்டரியின் உதவியில்லாமலே இந்த மின் விசிறியை ஆண்டு முழுவதும் பயன்படுத்த முடியும்.

பகல் முழுவதும் சூரிய ஒளியில் இயங்கும். சூரிய ஒளி மங்கியவுடன் எல்டிஆர் எனப்படும் சிறப்பு அமைப்பின் மூலம் காற்றின் சுழற்சிக்கு மாறும் வகையில் வடிவமைத்துள்ளோம். கண்டுபிடிப்புகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதததால் பல கண்டுபிடிப்புகள் இன்னும் கண்டுபிடிப்புகளாகவே உள்ளது என கூறினார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=60649

No comments:

Post a Comment