Tuesday, November 8, 2016

செயற்கை மழை சாத்தியமே!

சுற்றுப்புறவியல் விஞ்ஞானிகள் 1940-ஆம் ஆண்டு முதலே செயற்கை மழை உருவாக்க முயன்று வந்தனர். அதில் இதுவரை முழுமையான வெற்றி என்பது கானல்நீராகவே இருந்து வந்துள்ளது. சில்வர் அயோடைடு வேதிப்பொருளை மேகங்களின் மீது வானில் தூவுவது, மிக அதிகமான பரப்பில் உலர் பனிக்கட்டித் துகள்களை தூவுதல், உப்புத் துகள்களை மேகங்களின் மீது தூவி மேகங்களைக் குளிரச் செய்து நீர்த் திவலைகளை உண்டாக் குவது போன்ற செயற்கை முறைகளே இது வரை கையாளப்பட்டு வந்த கண்டுபிடிப்பு கள் ஆகும். அதாவது மேகங்களில் நீராவி யாக இருக்கும் நீர்த் திவலைகளை குளிரச் செய்து நீர்த் துளியாக மாற்று வதற்கு ஏதேனும் ஒரு பொருள் தேவைப் படுகிறது. இந்த முறைகள் பகுதி வெற்றியையே தந்துள்ளது. ஆனால் முழுமையான வெற்றியைத் தரவில்லை.

தற்போது ஜெனீவா பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சிக்குழு முற்றிலும் மாறுபட்ட புதிய நுட்பமான முறையை கையாண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளது. அது லேசர் கதிர்களை பயன்படுத்தி மேகங்களை உண்டாக்கி மழை பொழியச் செய்வது. இதன் ஒரு பகுதியாக லேசர் கதிர்களை செலுத்தி ஆய்வகங்களிலும், வான்வெளியிலும் பரிசோதித்து வெற்றி கண்டுள்ளது.

ஆய்வகத்தில், அதிக ஆற்றலை யுடைய வானிலிருந்து வரக்கூடிய, துணை அணுத்துகளான காஸ்மிக் கதிர்களை கண்டறியப் பயன்படும் மேக கலன் (கிளவுட் சேம்பர்) அல்லது அறையை உபயோகப்படுத்தினர். அதனுள் அதிக ஆற்றலுடைய துகள்களை செலுத் தும்போது, நீர்மூலக் கூறுகளில் உள்ள எலெக்ட்ரான்களை விடுபடவைக்கிறது. இதனால் அது மின்னூட்டம் பெற்ற துகள்களாகி, ஒரு மெல்லிய தூசி போல செயல்பட்டு நீர்த் திவலைகளாக மாற உதவுகிறது என்பதை கண்டுபிடித்தனர்.

இவர்களைப் போலவே சுவிஸ் ஆராய்ச்சியாளர்கள், அதிக பலம் வாய்ந்த அகச் சிவப்பு லேசர் கதிர்களை கிளவுட் சேம்பர் (மேக அறை) உள்ளே செலுத்தும்போது கலன் – 240 சென்டி கிரேடாக அதன் வெப்பம் குளிர்ந்து நீராவி மேகம் உருவாகிறது. அந்த ஆய்வில் முதலில் 50 மைக்ரோ மீட்டர் விட்டமுடைய நீர்த் துளிகள் உருவாகி றது. அதன்பின் அடுத்த 3 நொடிகளில் அது 80 மை. மீ. விட்டமுடைய நீர் துளிகளாக மாறுகிறது. மேலும் லேசர் கதிர்களை வானில் செலுத்தும்போது நீராவி குளிர்வடைந்து நீர்த் துளிகளாக மாறுகிறது. இவ்வாறு குளிர்வடைவதை இரண்டாவதாக மற்றொரு லேசரைக் கொண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு செயற்கை மழை உருவாக்குவதில் சாதனை செய்துள்ளனர்.

No comments:

Post a Comment