Saturday, March 15, 2014

பொது அறிவு சிறப்பு பகுதி - டி.என்.பி.எஸ்.சி குரூப் 2A பகுதி 15

எண் வினா விடை
281.திருக்குறள் பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்று. சரியா? தவறா?சரி
282. திருக்குறளின் வேறு பெயர்கள்? முப்பால், பொதுமறை, தமிழ்மறை, உலகப் பொதுமறை 
283. திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை? கிறித்து ஆண்டு (கி.பி) + 31 = திருவள்ளுவர் ஆண்டு 
284. தமிழ்த்தாத்தா என்றழைக்கப்படுபவர்? உ.வே.சாமிநாதய்யர் 
285. ஆடிப்பெருக்கில் ஆற்றில் விட்ட பழைய ஓலைச் சுவடிகளைப் பதிப்பித்தவர்? உ.வே.சாமிநாதய்யர் 
286. தமிழ்த்தாத்தா எந்த ஊரின் ஆற்றில் விட்ட ஓலைச் சுவடிகளைத் தேடி எடுத்தார்? ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி 
287. குறிஞ்சிப் பாட்டில் எத்தனை பூக்களுடைய பெயர்கள் உள்ளன? 99 
288. பத்துப்பாட்டு நூல்களுல் ஒன்று? குறிஞ்சிப் பாட்டு 
289. குறிஞ்சிப் பாட்டின் ஆசிரியர்? கபிலர் 
290. தமிழகத்தில் ஓலைச் சுவடிகள் பாதுகாக்கப்படும் இடங்கள்? கீழ்த்திசை சுவடிகள் நூலகம்-சென்னை, அரசு ஆவணக் காப்பகம்-சென்னை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்-சென்னை,சரஸ்வதி மஹால்-தஞ்சாவூர் 
291. உ.வே.சாமிநாதய்யர் பிறந்த ஊர்? திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரம் 
292. உ.வே.சாமிநாதய்யரின் இயற்பெயர்? வேங்கடரத்தினம் 
293. தமிழ்த்தாத்தாவிற்கு ஆசிரியராக இருந்தவர்? மீனாட்சி சுந்தரம் பிள்ளை 
294. தமிழ்த்தாத்தாவிற்கு அவருடைய ஆசிரியர் வைத்த பெயர்? சாமிநாதன் 
295. உ.வே.சா.வின் விரிவாக்கம்? உத்தமதானபுரம் வேங்கட சுப்பையா மகனான சாமிநாதன் 
296. உ.வே.சா. எந்த இதழில் தன் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுதினார்? ஆன்ந்த விகடன் 
297. உ.வே.சா. வின் வாழ்க்கை வரலாறு எந்த பெயரில் நூலாக வெளிவந்தது? என் சரிதம் 
298. உ.வே.சா. பதிப்பித்த நூல்கள்? எட்டுத்தொகை-8; பத்துப்பாட்டு-10; சீவக சிந்தாமணி-1; சிலப்பதிகாரம்-1; மணிமேகலை-1; புராணங்கள்-12; உலா-9; கோவை-6; தூது-6; வெண்பா நூல்கள்-13; அந்தாதி-3; பரணி-2; மும்மணிக் கோவை-2; இரட்டைமணிமாலை-2;இதர பிரபந்தங்கள்-4; 
299. உ.வே.சா. அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் எந்த ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது? 2006 
300. தமிழின் முதல் எழுத்து எது?  

No comments:

Post a Comment