Saturday, March 15, 2014

பொது அறிவு சிறப்பு பகுதி - டி.என்.பி.எஸ்.சி குரூப் 2A பகுதி 9

எண் வினா விடை
161.நாமக்கல் கவிஞர் என்று அழைக்கப்பட்டவர்?வெ. இராமலிங்கம் பிள்ளை
162.குழந்தைக் கவிஞர் என்ற சிறப்பிற்குரியவர்?அழ. வள்ளியப்பா
163.தொண்டை சீர் பரவுவார் என்று அழைக்கப்பட்டவர்?சேக்கிழார்
164.திராவிட சிசு என்ற சிறப்பிற்குரியவர்?திருஞானசம்பந்தர்
165.திருநாவுக்கரசரின் சிறப்புப் பெயர்கள்?வாகீசர், தருமசேனர், அப்பர்
166.மாணிக்கவாசகரின் சிறப்புப் பெயர்?அமுது அடியடைந்த அன்பர்
167.தம்பிரான் தோழர் எனப்படுபவர் யார்? சுந்தரர் 
168.கவிச்சக்கரவர்த்தி என்ற சிறப்புடையவர்? கம்பர் 
169.ஒட்டக்கூத்தரின் சிறப்புப் பெயர்? கவிராட்சஸன் 
170.பகுத்தறிவுக் கவிராயர் என்று அழைக்கப்படுபவர் யார்? உடுமலை நாராயணகவி 
171.திரையிசைத் திலகம் யார்? மருதகாசி 
172.____________ அவையில் அஷ்டதிக்கஜங்கள் எனப்படும் எட்டு அறிஞர்கள் இடம் பெற்றிருந்தனர்? கிருஷ்ணதேவராயர் 
173.தமிழ்நாட்டில் சங்ககாலப் பாண்டியரின் ஆட்சிக்காலத்தில் மதுரைக்கு வந்தவர்? மெகஸ்தனிஸ் 
174.வாரணம் ஆயிரம்என்ற பாசுரத்தைப் பாடியவர் யார்? ஆண்டாள் 
175.மாதனு பங்கிஎன்றழைக்கப்படுபவர்? திருவள்ளுவர் 
176.செஞ்சியை ஆண்ட மன்னர்களில் ____________________ தான் புகழ் பெற்ற மன்னன்? தேசிங்கு ராசன் 
177.பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்என்னும் பண்பாட்டு செறிவு மிக்க மொழி எது? தமிழ் 
178.பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடு? 1)பெறு  2)நடு  3)சுடு 4)பேறுபேறு 
179.பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடு? 1)தழால் 2)வெகுளி   3)மாட்சி     4)உணர்ச்சி மாட்சி 
180.வானினும்” - இலக்கணக் குறிப்பு தருக? உயர்வுச் சிறப்பும்மை 

No comments:

Post a Comment